ஆப்நகரம்

ஹார்ஸ்லி ஹில்ஸ் பயணம் உங்களை நிச்சயம் ஆச்சர்யப்படுத்தும்

குறுகிய மலைப்பாதையின் இரு மருங்கிலும் அடர்த்தியாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த யூகலிப்டஸ், குல்மோஹர், அலமண்டா, ஜகராண்டா போன்ற மரங்களைக் காணலாம். தூய்மையான சூழல், மனதிற்கினிய வானிலை, கண்ணுக்கினிய காட்சிகள் எல்லாம் உங்களைப் பரவசப்படுத்துவது உறுதி

Samayam Tamil 29 Jan 2020, 3:13 pm
ஆந்திரப் பிரதேசத்தின் ஊட்டி என்று சொல்லப்படும் ஹார்ஸ்லி ஹில்ஸ் ஒரு பிரபலமான மலை ரிஸார்ட்டும், கண்ணுக்கினிய மலைவாழிடமும் ஆகும். குறுகிய மலைப்பாதையின் இரு மருங்கிலும் அடர்த்தியாக ஓங்கி உயர்ந்து வளர்ந்த யூகலிப்டஸ், குல்மோஹர், அலமண்டா, ஜகராண்டா போன்ற மரங்களைக் காணலாம். தூய்மையான சூழல், மனதிற்கினிய வானிலை, கண்ணுக்கினிய காட்சிகள் எல்லாம் உங்களைப் பரவசப்படுத்துவது உறுதி
Samayam Tamil 800px-View_from_Horsely_hills_01
suffering_socrates


எழில்மிகுந்த விடுமுறை வாசஸ்தலமான ஹார்ஸ்லி ஹில்ஸ் உங்களுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன் கோடைகாலத்தின் புழுக்கமான உஷ்ணத்திலிருந்து உங்களை விடுவித்து மிகுந்த இதமளிக்கும். பச்சைப் பசேலென்று மரங்கள் மலைச் சரிவில் அடர்த்தியாய் வளர்ந்துள்ளன.!ஹார்ஸ்லி ஹில்ஸ் செல்லும் மலைப்பாதையில் பயணிக்கும்போது வன விலங்குகளையும், பசுமையான தாவர இனங்களையும் காண்பது உங்களுக்கு முழு உற்சாகம் தரும். கவர்ச்சிமிக்க மலர்கள் உங்கள் காலடியில்பட்டுப் பறந்து செல்லும். இந்த மலைச் சரிவு முழுதும் சம்பங்கி மலர்களின் மனம் காற்றில் தவழும்

ஜோர்பிங் எனப்படும் ஒளி புகும் பந்துகளின் உள்ளே இருந்தபடி மலைச் சரிவில் உருளுவது, ராப்பெல்லிங் எனப்படும் மலைக்கயிற்றிறக்கம் போன்ற சாகச விளையாட்டுக்களை வழங்கும் சில இடங்களில் ஹார்ஸ்லி ஹில்ஸும் ஒன்றாகும்.ஒரு காலத்தில் இவ்வூர் மல்லம்மா என்றொரு பெயர்கொண்ட பெண், ஒரு யானையால் வளர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தச் சின்னம் சிறு பெண்ணின் பெயரால் இந்தக் மலைவாழிடம் அந்நாளில் எனுகு மல்லம்மா என்ற பெயரால் வழங்கப்பட்டது.

இப்பெண் இக்காலத்தில் நோயுற்ற பழங்குடி மக்களைப் பேணிப் பாதுகாத்ததாளாம். மல்லம்மா ஒரு நாள் திடீரென மாயமானாள். இதன் காரணமாக இதே மலையில் மல்லம்மாவிற்குக் கோவில் கட்ட இவ்வூர் மக்கள் எண்ணியதாகவும் பல நம்பிக்கைகள் இங்கு நிலவுகின்றன.சில நாட்களுக்குப் பிறகு W.D.ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேய அதிகாரி இந்த மலையில் கராச்சி அறை மற்றும் பால் மாளிகை போன்ற கோடைக் கால ரிஸார்ட்டுகளைக் கட்டியதால் அவர் நினைவாகவே ஹார்ஸ்லி ஹில்ஸ் என்ற பெயரில் இந்த மலை வழங்கப்பட்டது.

இந்தச் சுவை மிக்க கதை மட்டுமல்லாமல் மதனப்பள்ளி இந்தியாவில் பெருவாரியாக வருவாய் ஈட்டித்தரும் பகுதியாகவும் அறியப்படுகிறது. மதனப்பள்ளியில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்ல தரத்துடன் இருப்பதால் இந்தியா முழுதும் இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது.அன்னி பெசன்ட் அம்மையாரின் நினைவாகக் கட்டப்பட்ட பெசன்ட் தியாஸாஃபிகல் சொசைட்டி கல்லூரியும், மற்றும் தத்துவவாதி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பிடமாகவும், இவர் நிறுவிய ரிஷி வேலி பள்ளிக்காகவும் இந்த நகரம் புகழ்பெற்றது.

இந்திய மகாகவி ரபீந்தரநாத் தாகூர் இந்திய தேசிய கீதத்தை மதனப்பள்ளி நகரில் இருந்தபோது எழுதியதாகவும், இக்கவிதைக்கு இந்நகரிலேயே இசை அமைத்ததாகவும் நம்பப்படுகிறது.இங்குள்ள மல்லம்மா கோவில், ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளிக்கூடம் போன்ற சிறப்பம்சங்கள் இங்கு உண்டு. கம்பீரமான வானிலை, இந்த மலை வாழிடத்தின் குளிர் காற்று எல்லாம் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும்.ஹார்ஸ்லி ஹில்ஸ் பெங்களூர், சென்னை, திருப்பதி, வேலூர், பாண்டிச்சேரி போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் இருப்பதால் இந்நகரங்களிலிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோடை வாசஸ்தலத்திற்குக் கூட்டம் கூட்டமாக வந்து குவிகின்றனர்.ஹார்ஸ்லி ஹில்ஸ் பெங்களூர், சென்னை, திருப்பதி, வேலூர், பாண்டிச்சேரி போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் இருப்பதால் இந்நகரங்களிலிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோடை வாசஸ்தலத்திற்குக் கூட்டம் கூட்டமாக வந்து குவிகின்றனர்.

அடுத்த செய்தி