ஆப்நகரம்

Brahmarishi Malai : உலக அழிவைச் சொன்ன சித்தர்! ஒளியாய் காட்சிதரும் பிரம்மரிஷி மலை எப்படி செல்வது?

முக்காலமும் உணர்ந்த தலையாட்டி சித்தர், இன்றளவும் வாழ்ந்து வரும் இடமாக பிரம்மரிஷி மலை கருதப்படுகிறது. பிரம்மரிஷி மலை என்பது தலையாட்டி சித்தரின் இருப்பிடம் மட்டுமல்லாது, மொத்தம் 210 சித்தர்கள் இப்போதும் இங்கு வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் பல அதிசயங்களை நிகழ்த்துவதாகவும் நம்பிக்கை நிலவி வருகிறது. பிரம்மரிஷி மலையின் அழகை கண்டு ரசிப்பதற்கும், இங்கு நடக்கும் விநோத செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஆவலாக இருக்கிறதா.? இன்னமும் பல ஆச்சர்யங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன.

Samayam Tamil 23 Dec 2019, 9:12 am
முக்காலமும் உணர்ந்த தலையாட்டி சித்தர், இன்றளவும் வாழ்ந்து வரும் இடமாக பிரம்மரிஷி மலை கருதப்படுகிறது. பிரம்மரிஷி மலை என்பது தலையாட்டி சித்தரின் இருப்பிடம் மட்டுமல்லாது, மொத்தம் 210 சித்தர்கள் இப்போதும் இங்கு வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் பல அதிசயங்களை நிகழ்த்துவதாகவும் நம்பிக்கை நிலவி வருகிறது. பிரம்மரிஷி மலையின் அழகை கண்டு ரசிப்பதற்கும், இங்கு நடக்கும் விநோத செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் ஆவலாக இருக்கிறதா.? இன்னமும் பல ஆச்சர்யங்களும் உங்களுக்காக காத்திருக்கின்றன.
Samayam Tamil thalaiyatti siddhar malai perambalur to chennai distance how to reach and more details
Brahmarishi Malai : உலக அழிவைச் சொன்ன சித்தர்! ஒளியாய் காட்சிதரும் பிரம்மரிஷி மலை எப்படி செல்வது?


​முக்காலமும் அறிந்தவர்.!


இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ள தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்னமும் சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார். அவர் எழுதிய காலஞானம் நூலில் வருங்காலத்தில் நடக்கும் பல அதிசயமான தகவல்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.!

​எப்படி செல்வது


எலம்பலூர் பெரம்பலூர் மாவட்டத் தலைநகரிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது எலம்பலூர். தேசிய நெடுஞ்சாலை 38 வழியாகச் செல்கையில் 2கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில்தான் பிரம்மரிஷி மலை உள்ளது.

​210 சித்தர்கள்.!


இந்த மலையில் 210 சித்தர்கள் இன்றும் வாழ்வதாகவும், அவர்கள் பல விநோத செயல்பாடுகளை தொடர்வதாகவும் இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு வலைகுரு சித்தர், கணபதி சித்தர், மகாலிங்க சித்தர் ஆகியோரது சமாதிகள் அமைந்துள்ளது. இவர்கள் அனைவரிலும் தலையாட்டி சித்தரின் வாக்கு அப்படியே பலிக்கிறது என்ற பேச்சும் நிலவுகிறது.

அதிர்வலைகள்.!

மலையின் கீழ் ஒரு சிறிய கோயில் இருக்கிறது. மிகுந்த அதிர்வலைகள் உடையதாய் இம்மலையும், இவ்வாலயமும் விளங்குகிறது. மலைமீதுள்ள கோயிலில் சிலசமயங்களில் ஒலிக்கும் பாடல் கீழே அடிவாரம் வரை கேட்கும். அதை கேட்டுக்கொண்டே நடந்தால் அசதி தெரியாது. பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் நடந்து சென்ற இடங்கள் கிட்டத்தட்ட படிக்கட்டுகளைப் போலவே மாறிவிட்டது.

​திருமங்கலியம்மன் கோயில்.!


இந்த மலையில் அமைந்துள்ளது திருமங்கலியம்மன் கோயில். இது தற்போது புணரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. ஒற்றைப் பனமர நிழலில் கோயிலை உயர்ந்து பார்க்கும்போது, அது ஒற்றைப் பனமரநிழலில் நிற்பதுபோல காட்சிதரும்.

500 ஆண்டுகள் பழமையானது.!

இது 500 ஆண்டுகள் பழமையானது. அடர்ந்த காடுகளில் மனிதர்கள் செல்லமுடியா குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மற்ற மலைகளைப்போலல்லாமல், இந்த மலையில் சித்தர்களை எளிதாக தொடர்புகொள்ளமுடியும் என்றும் கூறுகிறார்கள்.

ஒளியாய் காட்சிதரும் சித்தர்கள்.!


சபரிமலையில் எப்படி ஐய்யப்பன் ஒளியாய் காட்சிதருவார் என்ற நம்பிக்கை உள்ளதோ அதுமாதிரியான நம்பிக்கைதான் இதுவும். இங்கு, சித்தர்கள் ஒளியாய் காட்சி தரும் நாளாக கார்த்திகை தீப நாள் உள்ளது. அதன் நினைவாக திருவண்ணாமலை தீபத்தைப் போல ஒளியேற்றி வழிபடுகின்றனர்.

அடுத்த செய்தி