ஆப்நகரம்

பல்கேரியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த தம்பதி: விமானம், செல்போன் இன்றி சாகசப் பயணம்

பல்கேரியாவில் இருந்து இந்தியாவிற்கு விமானம், செல்போன் இன்றி பயணித்து தம்பதி இருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

TNN 10 Jan 2017, 2:58 pm
டெல்லி: பல்கேரியாவில் இருந்து இந்தியாவிற்கு விமானம், செல்போன் இன்றி பயணித்து தம்பதி இருவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
Samayam Tamil this couple traveled from bulgaria to india without a plane or a smartphone
பல்கேரியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த தம்பதி: விமானம், செல்போன் இன்றி சாகசப் பயணம்


தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த கால கட்டத்தில், அதிலிருந்து விலகி நிற்பதும் அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் அதிகப்படியானோர் உலவி வரும் நிலையில், சிலர் ஆஃப் லைனிலும் உலவி வருகின்றனர். அதற்கு போரிஸ் கனேவ், மார்தா சமலியா தம்பதியினர் உதாரணமாக விளங்குகின்றனர். அவர்கள் பல்கேரியாவில் இருந்து இந்தியாவிற்கு சாகசப் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

அதன் சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் விமானத்தையும் பயன்படுத்தவில்லை. ஸ்மார்ட்போன்களையும் பயன்படுத்தவில்லை. 21ஆம் நூற்றாண்டில் வசித்து வரும் நமக்கு, அது ஒரு ஆச்சரிய நிகழ்வாகவே இருக்கும். அந்த தம்பதியினர் தங்களுடன் நெட் புக், DSLR கேமரா, இ-புக் ரீடர், பேசிக் நோக்கியா செல்போன் ஆகியவை ஆகும்.

தாங்கள் பயணித்த 511 நாட்களின் அனுபவத்தையும் நெட்புக்கில் பதிவு செய்து வைத்துள்ளனர். அந்த பதிவில் தங்களின் பல்வேறு நாட்டு பயணங்கள், புதிய மனிதர்களின் சந்திப்புகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆன்லைன் மேப்பை பயன்படுத்தாமல், காகித மேப்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை ஆன்லைன் மூலம் தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து கொண்டே இருந்துள்ளனர்.

இன்பமாக மட்டுமல்லாமல், போதிய ரூபாய் நோட்டுக்கள் இன்றி, டாலர் பணத்தை மாற்ற இயலாமல், மக்களின் மொழி தெரியாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்துள்ளனர்.

This Couple Traveled From Bulgaria To India Without Getting On A Plane Or Using A Smartphone, And They Are Here.

அடுத்த செய்தி