ஆப்நகரம்

Fort StGeorge, Ripon Building : சென்னையின் வயதான கட்டிடங்களும் சுவாரசியங்களும்

சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமுமாக விளங்கிறது. நவீனமும் பாரம்பரியமும் கலந்து, பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் திகழ்கிறது.

Samayam Tamil 31 Dec 2019, 3:17 pm
சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமுமாக விளங்கிறது. நவீனமும் பாரம்பர்யமும் கலந்து, பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் திகழ்கிறது. மருத்துவம் தொடங்கி, பல துறைகளில் முன்னோடியாகத் திகழும் சென்னையில் பிரபலமான கலாச்சார சுற்றுலா இடங்களை இப்போது பார்க்கலாம்.
Samayam Tamil chennai places to visit in one day madras high courtgovernment museumnapier bridge and more things to know
Fort StGeorge, Ripon Building : சென்னையின் வயதான கட்டிடங்களும் சுவாரசியங்களும்


​புனித ஜார்ஜ் கோட்டை


இந்தியாவில், பிரித்தானியர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக, புனித ஜார்ஜ் கோட்டை கருதப்படுகிறது. பிரான்சிஸ்டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இரண்டு ஆங்கில அதிகாரிகளின் முயற்சியில் 1963ம் ஆண்டு, இந்த கோட்டையின் கட்டுமான பணி தொடங்கியது. புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23ம் தேதி கட்டிமுடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. சென்னைக்கு சுற்றுலா வரும் அனைவரும் பார்க்க விருப்பப்படும் இடங்களுள் ஒன்றாக புனித ஜார்ஜ் கோட்டை இருக்கிறது.

PC: L.vivian.richard

​ரிப்பன் கட்டிடம்


சென்னையில் இருக்கும் பழமையான கட்டிடங்களுள் ஒன்றாக ரிப்பன் கட்டிடம் இருக்கிறது. லோகநாத முதலியார் என்பவரால், அக்காலத்திலேயே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், 1909ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, 1913ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த ரிப்பன் பிரபுவின் பெயர் இக்கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது.

PC: L.vivian.richard


​மெட்ராஸ் போர் கல்லறை


இரண்டாம் உலகப்போரில் இறந்தவர்களின் நினைவாக 1952ம் ஆண்டு, 2.75 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது மெட்ராஸ் போர் கல்லறை. இது, சென்னை நந்தனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த கல்லறையில், இறந்தவர்களின் உடல் எதுவும் புதைக்கப்படாமல், அவர்களுடை பெயர் அச்சடிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.

Pc: Silvarius Celso


​சென்னை சாந்தோம் தேவாலயம்:


சென்னையில் மிக முக்கியமான தேவாலயமாக கருதப்படும் சாந்தோம் தேவாலயம், 16ம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. பின்னர், 1893ம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் விரிவாக்கப்பட்டது. சாந்தோம் என்ற சொல்லிற்கு ‘புனித தோமா’ என்று பொருள்.

PC: Indyblue


​சென்னை உயர் நீதிமன்றம்


உலகின், இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகம் கருதப்படுகிறது. இக்கட்டிடம், விக்டோரியா பேரரசியின் ஆட்சியில் நிறுவப்பட்டது. மேலும், 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892ல் என்றி இர்வின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டி முடிக்கப்பட்டது.

PC: Yoga Balaji

​சென்னை அரசு அருங்காட்சியகம்


சென்னை எழும்பூர் பகுதியில், சென்னை அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 16.25 ஏக்கர் பரப்பளவில், 1851ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. தொல்லியல், நாணயவியல், சிற்பம் முதலியவைகள் உள்ளடங்கிய 46 காட்சிக்கூடங்கள், சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது. கோடை விடுமுறையின்போது குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய இடமாக சென்னை அருங்காட்சியகம் இருக்கிறது.

PC: L.vivian.richard


​நேப்பியர் பாலம்


புனித ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைப்பதாக நேப்பியர் பாலம் அமைந்திருக்கிறது. சென்னை மாநகரின் மிக பழமையான பாலங்களுள் ஒன்றான நேப்பியர் பாலம், 1869ம் ஆண்டு பிரான்சிஸ் நேப்பியர் என்ற ஆளுநரால் கட்டப்பட்டது. 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் மிக பிரம்மாண்டக கட்டப்பட்டது. சென்னையில் உள்ள பெரும்பாலானோர் கடந்து செல்லும் பாலமாகவும், நிறைய தமிழ் படக்காட்சிகளில் வந்து செல்லும் பாலமாகவும் இப்பாலம் இருக்கிறது.

PC: Ravichandar84


​கன்னிமாரா பொது நூலகம்


தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இது காலை 9 மணி முதல் இரவு 07- 30 வரை திறந்திருக்கும். தேசிய விடுமுறை நாட்களில் இது செயல்படாது. அனுமதி இலவசம்.

PC: SriniG


​விவேகானந்தர் இல்லம்


ஐஸ் ஹவுஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட இடம் 1963 முதல் சுவாமி விவேகானந்தர் நினைவாக விவேகானந்தர் இல்லம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1842 முதல் 1874 வரை ஐஸ் கட்டிகளைச் சேமித்து வைக்கும் இடமாக இது விளங்கியது. தற்போது இதில் விவேகானந்தர் தொடர்பான அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.

PC: SriniG


​கிண்டி தேசிய பூங்கா


உலகிலேயே நகர்ப் பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா கிண்டி தேசிய பூங்காதான். சென்னை நகரின் நுரையீரலாக கருதப்படும் மரங்கள் அடர்ந்த நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும், பறவைகளும் உள்ளன.

PC: Sudharsun Jayaraj

அடுத்த செய்தி