நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மொத்த சுற்றுலாத் தளங்களின் பட்டியல்
தாவரவியல் பூங்கா
ரோஜா பூங்கா
உதகை ஏரி படகு இல்லம்
தொட்டபெட்டா
உதகை ராஜ்பவன்
கிளன்மார்கன்
அவலாஞ்சி
பைகாரா நதி
பைகாரா நீர்வீழ்ச்சி
சிம்ஸ் பூங்கா
முதுமலைபுலிகள் காப்பகம்
ஆதாம் செயற்கை நீரூற்று
ரங்கசாமி சிகரம் மற்றும் தூண்
ஊசி பாறை காட்சி முனையம்
ஊட்டி ஏரி
குதிரைப் பந்தைய திடல்
நகராட்சி சந்தை
எமரால்டு ஏரி
காட்டேரி அருவி
காமராஜ் சாகர் அணை
கூடலூர் வண்ணத்துப் பூச்சி பூங்கா
கேத்தரின் அருவி
கொடநாடு காட்சி முனை
டால்பின் மூக்கு
தவலை மலை காட்சி முனை
லவ்டேல்
லாஸ் அருவி
லேடி கன்னிங்ஸ் சீட்
வெல்லிங்டன் கண்டோன்மென்ட்
ஜீன்பூல் சூழல் பூங்கா
பொம்மை ரயில்
நூல் தோட்டம்
கல்ஹட்டி நீர்வீழ்ச்சி
புலிமலை
காமராஜ் சாகர் ஏரி
துரூக் கோட்டை
லெம்ப் பாறை
காட்டெருமை பள்ளத்தாக்கு
பிளாக் தண்டர்
பகாசூரன் மலை
கேட்டி பள்ளத்தாக்கு
மான் பூங்கா
தூரப்பள்ளி தொங்குபாலம்
நெல்லியாலம்
பண்டலூர்
சேரம்பாடி
தேவலா
லாங்க்வுட் சோலை
மோயர் அருவி
புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்கள்
PC: Kishore1902
தாவரவியல் பூங்கா - அரிய வகை செடிகளும் மூலிகைகளும் கொண்டு காண்போர் கண்களை கவரும் அழகிய பூங்கா இது. 1847ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர்.
ரோஜா பூங்கா - 4 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா எல்க் குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, சண்டிகர், கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 3800 ரகங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் ரோஜா செடிகள் இங்கு காணப்படுகின்றன.
உதகை ஏரி படகு இல்லம் - 1824ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஏரி இப்போதும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெடல் படகுகள், அக்குவா பைக்குகள், ரோ படகுகள் என ஏரியில் மகிழ்ந்து பயணிக்கலாம்.
தொட்டபெட்டா - பெரிய மலை எனும் கன்னட மொழியின் பெயரைத் தாங்கிய இந்த இடம், ஊட்டியிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் உயரமான சிகரம் இதுதான்.
வியத்தகு காட்சி முனையங்கள்
PC: San95660
ஊசி பாறை காட்சி முனையம் - நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ள இடம் இது. ஊட்டியிலிருந்து 51 கிமீ தூரத்தில் இருக்கும் ஊசி பாறை காட்சி முனையம், நீலகிரி மாவட்டத்தின் 360 டிகிரி பார்வை அளிக்கக்கூடியது.
ரங்கசாமி சிகரம் மற்றும் தூண் - கோத்தகிரி பகுதியிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ரங்கசாமி சிகரம். செங்குத்தாக அமைந்துள்ள இந்த சிகரத்தின் உச்சியை இதுவரையில் யாரும் சென்றடைந்தது இல்லை. இதன் அருகில் ஒரு தூண் உள்ளது. தூணின் உயரம் சுமார் 400 அடி ஆகும்.
கொடநாடு காட்சி முனை - கொடநாடு காட்சி முனை கோத்தகிரி பகுதியில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறப்பு மிக்க இடமாகும்.
டால்பின் மூக்கு - குன்னூரில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கண்கவரும் டால்பின் மூக்கு. இங்கிருந்து உதகமண்டலத்தின் மொத்த பகுதியையும் காணலாம்.
தவளை மலை காட்சி முனை - கூடலூரிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் 12 கிமீ தொலைவில் இந்த தவளை மலை காட்சி முனை அமைந்துள்ளது. இங்கு காலையில் சென்று மாலையில் இறங்குவது சுற்றுலாப் பயணிகளின் வாடிக்கை ஆகும்.
அமைதியும் நீர்வீழ்ச்சிகளும்
பைகாரா நீர்வீழ்ச்சி - ஒன்றாக உருவாகி இரண்டாக பிரிந்து விழுகின்றன இந்த பைகாரா நீர்வீழ்ச்சி. ஒன்று 55 மீட்டர் உயரத்திலிருந்தும், மற்றொன்று 61 மீட்டர் உயரத்திலிருந்தும் வீழ்கின்றன. ஊட்டியிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
காட்டேரி அருவி - குன்னூரில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த காட்டேரி அருவி 180அடி உயரம் கொண்டது. நடந்து செல்லும் அனுபவம் இந்த அருவியின் அழகைக் காணும் பூரிப்பை அதிகரிக்கும்.
கேத்தரின் அருவி - அருவி விழக்கூடிய மலை நீலகிரி மலைகளில் இரண்டாவது மிக உயர்ந்த இடமாக உள்ளது. இந்த அருவியின் உயரம் ஏறக்குறைய 250 அடி ஆகும். இந்த அருவியை முழுமையாக பார்க்கவேண்டுமானால் டால்பின் மூக்கு என்ற இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும்
மோயர் அருவி - முதுமலை வன விலங்கு காப்பகத்திற்குள் மோயர் அருவி உள்ளது. இது கூடலூரில் இருந்து 22 கி.மீ. தொலைவு ஆகும்.
லாஸ் அருவி - நீலகிரி மாவட்டம் குன்னுரில் அமைந்துள்ள லாஸ் அருவி ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள் பற்றியும் அவற்றின் சிறப்பம்சங்கள் பற்றியும் இன்னும் விரிவாக நமது சமயம் தமிழ் சுற்றுலா பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.