ஆப்நகரம்

வெளியேற்றப்பட்ட ஆஜித்! அவர் பேசாததற்கு இது தான் காரணமா.. இது தெரியாம போச்சே

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று ஆஜித் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

Samayam Tamil 3 Jan 2021, 11:28 pm
பிக் பாஸ் 4ல் இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர். அதில் இறுதி மூவராக ரம்யா, ஷிவானி மற்றும் ஆஜித் ஆகியோரை கமல் வைத்திருந்தார். அதில் ஷிவானி காற்றப்பட்டதாக அறிவித்த கமல் கடைசி இருவரான 'ஆஜித் மற்றும் ரம்யா இருவரையம் ஸ்டோர் ரூம் சென்று ஒரு சூட் கேஸ் எடுத்து வாருங்கள் என சொன்னார்.
Samayam Tamil Aajeedh (Pic Credits: Hotstar)


அதில் ரெட் ஸ்டிக்கரில் அஜித்தின் பெயர் இருந்தது. அதனால் ஆஜித் தான் எலிமினேஷன் என கமல் கார்டை காட்டி அறிவித்தார். அதன் பின் ஆஜித் அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வந்தார்.

அப்போது கமல் ஹாசன் உடன் அவர் பேசும்போது தான் முன்றாவது வாரம் வெளியேற்றப்பட்டதாகவும் அதில் இருந்து தப்பி தற்போது வரை இருந்ததே பெரிய விஷயம் என கூறினார். அதன் பின் ஆஜித் சரியாக பேசாதது பற்றி குறிப்பிட்ட கமல் 'பொதுவாக பாடகர்கள் சத்தமாக பேச மாட்டார்கள். சரீரம் கெட்டுப்போகும் என பலர் அப்படி செய்ய பார்த்திருக்கிறேன். அதனால் தான் நீங்கள் பேசவே இல்லை என நினைத்தேன்' என கமல் கூறி இருக்கிறார்.

ஆஜித் பேசத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா என பிக் பாஸ் ஷோ பார்க்கும் அனைவரும் சற்று ஆச்சர்யம் அடைத்திருப்பார்கள்.

மேலும் ஆஜித் பேசும்போது 'நான் இத்தனை வாரங்களாக ஓபன் அப் ஆகவில்லை என சொன்னார்கள், இந்த வாரம் நான் ஆகிவிட்டதாக நீங்களே சொன்னீர்கள்' என மகிழ்ச்சியாக ஆஜித் சொன்னார். 'நீங்களும் ஓபன் அப் ஆகிட்டிங்க. கதவும் ஓபன் ஆகிடுச்சு' என கமல் கலாய்த்து ஆஜித்தை வெளியில் அனுப்பி இருக்கிறார்.

அடுத்த செய்தி