விஜய் டிவியின் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் அபிஷேக் ராஜா மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் கேமை குழப்புகிறார், தனது லாபத்திற்காக பேசி பேசியே அவர் மற்றவர்களை influence செய்கிறார் என வீட்டில் இருப்பவர்களே கூறி வருகின்றனர். எல்லோரையும் குறை சொல்ல நீ என்ன நாட்டாமையா என நேற்று ப்ரியங்காவே அபிஷேக்கிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது நெட்டிசன்களும் அபிஷேக் ராஜாவை தான் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் கமல் ஹாசன் வீட்டுக்கு வந்த போது அபிஷேக் ராஜா தான் பிக் பாஸ் முந்தைய சீசன்களை பார்த்ததே இல்லை என சொன்னார். நீங்கள் தொகுத்து வழங்கியதால் தான் பார்க்கவே இல்லை என கமலிடமே அவர் கூறினார்.
அதன் பின் இந்த வாரம் டாஸ்க் நடக்கும் போது அபிஷேக் ராஜா மதுமிதாவை பார்த்து அவர் தான் இந்த சீசன் லாஸ்லியா என கூறினார். மேலும் சில வாரங்களுக்கு முன்பு நாடியா சேங் வனிதா மாதிரி வருவார் என கூறி இருந்தார் அபிஷேக். இதுபோல அபிஷேக் பிக் பாஸ் முந்தைய சீசன்கள் பற்றி பேசியிருக்கும் அபிஷேக் தான் பிக் பாஸே பார்த்ததில்லை என சொல்வது பச்சை பொய் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கடந்த வார இறுதியில் கமல் ஹாசன் வீட்டுக்கு வந்த போது அபிஷேக் ராஜா தான் பிக் பாஸ் முந்தைய சீசன்களை பார்த்ததே இல்லை என சொன்னார். நீங்கள் தொகுத்து வழங்கியதால் தான் பார்க்கவே இல்லை என கமலிடமே அவர் கூறினார்.
அதன் பின் இந்த வாரம் டாஸ்க் நடக்கும் போது அபிஷேக் ராஜா மதுமிதாவை பார்த்து அவர் தான் இந்த சீசன் லாஸ்லியா என கூறினார். மேலும் சில வாரங்களுக்கு முன்பு நாடியா சேங் வனிதா மாதிரி வருவார் என கூறி இருந்தார் அபிஷேக். இதுபோல அபிஷேக் பிக் பாஸ் முந்தைய சீசன்கள் பற்றி பேசியிருக்கும் அபிஷேக் தான் பிக் பாஸே பார்த்ததில்லை என சொல்வது பச்சை பொய் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.