ஆப்நகரம்

அர்ச்சனாவுக்கு பயம்! சனம் ஷெட்டியையும் மன்னிப்பு கேட்க வெச்சிருக்கணும்.. விளாசிய பிரபல நடிகை

பிக் பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவம் பற்றி நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் பேசி இருக்கிறார். என்ன கூறி இருக்கிறார் என பாருங்கள்.

Samayam Tamil 22 Oct 2020, 2:17 pm
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அக்டோபர் 4ம் தேதி துவங்கிய பிக் பாஸ் நான்காவது சீசன் பரபரப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. துவங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு நடுவில் சண்டை வரத் துவங்கியதால் தினந்தோறும் புதுப்புது பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
Samayam Tamil Archana in Bigg Boss (Pic Credits: Hotstar)


நேற்று வழக்கமான சண்டைகளை விட சற்று அதிகமாகவே சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் சண்டை போட்டனர். தலையில் தட்டி விட்டார் என்பதால் சனம் ஷெட்டி மிகவும் கோபமாக சுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா போன்ற தகாத வார்த்தைகளில் திட்டத் தொடங்கினார்.

இது பெரிய பிரச்சனையாக மாறிய நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி இறுதியில் மன்னிப்பு கேட்டார். அதற்குப் பின் பிக் பாஸ் கண்ட்ரோல் ரூமுக்கு சென்று தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விடுங்கள் என்று கூறி கதறி அழுதார். ஆனால் 'நீங்கள் தெரியாமல் செய்த தவறு. மன்னிப்பு கேட்டுவிட்டீர்கள். மற்றதை பேசி தீர்த்து கொள்ளுங்கள்' என்று கூறி பிக் பாஸ் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த சம்பவங்களை பற்றி நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது..

"என்ன காரணமாக இருந்தாலும் சுரேஷ் செய்தது தவறு, ஆரஞ்சு பழ தோலில் வரும் சாற்றை ஆரியின் கண்களில் அடித்தாலும் வெற்றி பெறலாம்? பலரும் பேசும் போது மிகவும் கடுமையாக பேசுகிறார்கள். அதை மற்றவர்கள் தடுக்கவும் இல்லை, அதற்கு காரணம் Favourism. அர்ச்சனா எந்த நோக்கத்தில் இதை செய்தார் என்பதை நான் பாராட்டுகிறேன். ஆனால் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் போல மிகவும் ரூடாக மற்றவர்களை கட்டளையிடுவதை பார்க்கும் போது, அவர் சுரேஷின் பாப்புலாரிட்டியை பார்த்து பயப்படுகிறார், அது அவருக்கு சவாலாக இருக்கும் என நினைக்கிறார் என தோன்றுகிறது. பத்து நாட்கள் ஷோ பார்த்துவிட்டு வந்தவர் என்பதால் சுரேஷ் சக்கரவர்த்தியின் பாப்புலாரிட்டி பற்றி நன்கு தெரிந்திருக்கும்."

"அவர் சொன்னதை பொறுமையாக சொல்லி இருக்கலாம். அவர் நியாயமானவர் ஆக இருந்திருந்தால், சனம் ஷெட்டியையும் மன்னிப்பு கேட்க வைத்திருக்க வேண்டும். ஷுட்டிங்கில் எப்போதும் தர்மகோல் தான் பயன்படுத்துவார்கள். இரும்பினால் ஆன ஆயுதங்களை கொடுத்திருந்தால் அது விஜய் டிவியின் தவறு. என்னை பொருத்தவரை நிஷா தான் மேட்ச் வின்னர்."

இவ்வாறு ஸ்ரீப்ரியா கூறியிருக்கிறார்

அடுத்த செய்தி