ஆப்நகரம்

Bigg Boss Tamil: இந்த வாரம் இவர் வெளியேற்றப்பட்டாரா? அப்போ கவின் என்ன ஆனார்?

இந்த வாரம் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 10 Aug 2019, 8:16 pm
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வழக்கம் போல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. மொத்தம் 16 போட்டியாளர்களில் வரிசையாக, ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து சாக்‌ஷி அகர்வால் தான் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், ரேஷ்மாவை வெளியேற்றி ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியளித்தார் பிக் பாஸ். இந்த நிலையில், தொடர்ந்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பொது நிகழ்ச்சியில் பதிவு செய்த சரவணனை பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
Samayam Tamil Sakshi Agarwal


Also Read: Bigg Boss Trolls : இந்த வாரம் வெளியே போகபோறது யார்? அபியா? சாக்ஷியா?

இந்த நிலையில், தான் ஒயில்டு கார்டு மூலம் நடிகை கஸ்தூரி 17ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். ஆனால், அவர் தான் பிக் பாஸ் வீட்டின் 17ஆவது போட்டியாளரா? என்று உறுதி செய்ய பெரும் போராட்டமே நடந்துள்ளது. உண்மையில் கஸ்தூரி தான் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லயிருப்பதாக கூறவேயில்லை. மறைமுகமாவே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார். தற்போது, வீட்டிற்குள் அபிராமி, கவின், லோஸ்லியா, சாக்‌ஷி, கஸ்தூரி, சாண்டி, மதுமிதா, தர்ஷன், முகென், சேரன், ஷெரின் ஆகியோர் இருக்கின்றனர்.

Also Read: Bigg Bos Episode 47: சக்கரப் பொங்கலை ஃபிரைடு ரைஸ் போல சமைத்த கஸ்தூரி- கழுவி... கழுவி... ஊற்றிய சாண்டி..!

இவர்களில் அபிராமி, லோஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதில், அண்மையில், வெளியான தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள அபிராமிக்கு தல ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம், அவர் கண்டிப்பாக இந்த வாரம் வெளியேற்றப்படமாட்டார். அவரைப் போன்று ஓவியாவைப் போன்று உண்மை, நியாயம், நேர்மை என்று இருக்கும் லோஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆதரவு இருந்து கொண்டே இருக்கிறது. ஆதலால் அவர் வெளியேற்றப்படமாட்டார். இதனால், எஞ்சியிருப்பது சாக்‌ஷி தான். ஆதலால், அவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Also Read: பிக்பாஸ் வீட்டில் முகினுக்கு கண்ணீருடன் குட்பை சொன்ன அபிராமி

இவர், வெளியேற்றப்பட்ட நிலையில், கவின் தனிமையில் இருப்பார் என்று கூறப்படுகிறது. என்னதான், கவின் – சாக்‌ஷி மற்றும் லோஸ்லியா காதல் பிரச்சனையில் இருந்தாலும், தொடக்கம் முதல் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி அரவணைத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எலிமினேசனில் உள்ள அபிராமிக்கு கமலின் பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனால், நேர்கொண்ட பார்வை படத்தில் அவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி