ஆப்நகரம்

நயன்தாராவுக்கு இதெல்லாம் தேவையா.. பிக் பாஸ் வீட்டில் அறந்தாங்கி நிஷா அட்ராசிட்டி

அறந்தாங்கி நிஷா இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்திருக்கும் நிலையில் காமெடியாக பேசி அனைவரையும் entertain செய்திருக்கிறார்.

Samayam Tamil 11 Jan 2021, 11:34 pm
பிக் பாஸ் வீட்டுக்கு இன்று விருந்தினர்களாக அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ், ரேகா ஆகியோர் மீண்டும் வந்திருக்கிறார்கள். அவர்கள் இன்னும் நான்கு நாட்களுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் தான் இருக்கப்போகிறார்கள். அவரகள் மீண்டும் வீட்டுக்குள் வருவது மெயின் டோர் வழியாக இல்லாமல், ஸ்டோர் ரூம் வழியாக தான் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர்.
Samayam Tamil Aranthang Nisha (Pic Credits: Hotstar)


போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் இருந்த நிலையில் கதவு மூடப்பட்டு இருந்த போது தான் அவர்கள் வீட்டுக்குள் வந்தனர். அப்போது நிஷா கிட்சன் அடியில் ஒளிந்துகொண்டார். அப்போது அவர் கேமராவை பார்த்து சற்று ஆதங்கத்துடன் பேசினார்.

"ஊரெல்லாம் உன்னை கண்டு நயன்தாரா.. என பாட்டு போட்டு வரவேற்பீர்கள் என பார்த்தால் கொல்லைப்புறமாக கூட்டி வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள். ஒரு நயன்தாராவுக்கு இதெல்லாம் தேவையா" என கேமராவை பார்த்து பேசினார்.

சின்னத்திரை நயன்தாரா என நிஷாவை பலரும் கிண்டலாக அழைப்பதும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் போட்டியாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோது தான் வெளியில் சந்தித்த சில கேள்விகள் பற்றியும் காமெடியாக கூறினார். சண்டை போட்டதெல்லாம் ஸ்கிரிப்ட் தானே என கேட்கிறார்கள். அழும்போது கண்ணில் glycerine ஊற்றிக்கொண்டு அழுவீர்களா என கேட்டார்கள். சாப்பாடு அனுப்பிடுவாங்க, டிரஸ் iron பண்ணி வந்துடும்.. பிறகு என்ன கஷ்டம் என்று கூட சிலர் கேள்வி எழுப்பியதாக நிஷா மேலும் கூறினார்.

அடுத்த செய்தி