பிக் பாஸ் 4வது சீஸனில் போட்டியாளர்களாக மொத்தம் 18 பேர் கலந்துகொண்டாலும் அதில் பைனலிஸ்ட் ஆக ஆறு பேர் மட்டுமே இருந்தனர். கேபி 5 லட்சம் பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில், சோம் ஐந்தாவது இடத்தையும், ரம்யா நான்காவது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
அதன் பின் கடைசி இருவராக ஆரி மற்றும் பாலாஜி இருந்தனர். அவர்களில் ஆரி அதிக வாக்குகள் பெற்று ஜெயித்ததாக கமல் அறிவித்தார். பிக் பாஸ் 4 தொடங்கியதில் இருந்தே ஆரி மற்றும் பாலாஜி இடையே அடிக்கடி பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருந்தது. சண்டை போடும் நேரத்தில் எல்லாம் இருவரும் 'ஹீரோ - வில்லன்' உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போட்டுக்கொள்வார்கள்.
ஆனால் பிக் பாஸ் 4 இறுதி கட்டத்தில் பாலாஜி ஆரியுடன் சற்று நெருக்கமாக தான் இருந்தார். அதனால் அவர்கள் சமாதானம் அடைந்துவிட்டார்கள், இனி எந்த பிரச்னையும் இல்லை என ரசிகர்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் பாலாஜி தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "உங்கள் கதையில் நான் வில்லனாக இருக்கலாம். ஆனால் என கதையில் நான் ஹீரோ" என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதில் ஆரியை தான் பாலாஜி மறைமுகமாக குத்தி காட்டுகிறாரோ என நெட்டிசன்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் பின் கடைசி இருவராக ஆரி மற்றும் பாலாஜி இருந்தனர். அவர்களில் ஆரி அதிக வாக்குகள் பெற்று ஜெயித்ததாக கமல் அறிவித்தார். பிக் பாஸ் 4 தொடங்கியதில் இருந்தே ஆரி மற்றும் பாலாஜி இடையே அடிக்கடி பிரச்சனைகள் வந்துகொண்டே தான் இருந்தது. சண்டை போடும் நேரத்தில் எல்லாம் இருவரும் 'ஹீரோ - வில்லன்' உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தி சண்டை போட்டுக்கொள்வார்கள்.
ஆனால் பிக் பாஸ் 4 இறுதி கட்டத்தில் பாலாஜி ஆரியுடன் சற்று நெருக்கமாக தான் இருந்தார். அதனால் அவர்கள் சமாதானம் அடைந்துவிட்டார்கள், இனி எந்த பிரச்னையும் இல்லை என ரசிகர்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் பாலாஜி தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "உங்கள் கதையில் நான் வில்லனாக இருக்கலாம். ஆனால் என கதையில் நான் ஹீரோ" என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதில் ஆரியை தான் பாலாஜி மறைமுகமாக குத்தி காட்டுகிறாரோ என நெட்டிசன்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.