ஆப்நகரம்

Bigg Boss 4: பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? கலங்கிய பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் 4 போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் தான் சிறு வயது முதலே போதைக்கு அடிமையான பெற்றோரால் சந்தித்த துயரம் பற்றி பேசி இருக்கிறார்.

Samayam Tamil 9 Oct 2020, 3:32 pm
பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்திருப்பவர் பாலாஜி முருகதாஸ். அவர் 2018ல் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர். இதற்கு முந்தைய வருடம் ஃபைனல் வரை சென்றாலும் ஜெயிக்காத நிலையில். 2018ல் டைட்டில் வென்றார். இருப்பினும் இவர் மீது மீடியா வெளிச்சம் அதிகம் படவில்லை. தொடர்ந்து மாடலிங் செய்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்திருக்கிறார்.
Samayam Tamil Balaji Murugadoss


தற்போது பிக்பாஸ் நான்காவது சீசன் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறி வரும் நிலையில் இன்று பாலாஜி முருகதாஸ் தன் கதையைக் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுது விட்டனர்.

"என் பெற்றவர் என்னை பள்ளியில் சேர்த்து விட்டதோடு சரி. அவர்கள் பள்ளிக்கு பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு கூட வந்தது கிடையாது. நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தலை வலிக்கும். என்ன என்று எழுந்து பார்ப்பேன். அருகில் அப்பா கைகளில் கேஸ் ட்யூப் வைத்து நின்றிருப்பார். அப்போது தான் நான் உணர்வேன் அவர் என்னை அடித்திருக்கிறார் என்று."

"அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் போதைக்கு.. உங்களால் குழந்தையை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் குழந்தை எதற்காக பெற்றுக்கொள்கிறீர்கள்" என கூறி அழுதார் பாலா.

அதைக் கேட்ட மற்ற போட்டியாளர்களுக்கு கண்கள் கலங்கியது. அனைவரும் வந்து பாலாஜி முருகதாசை கட்டி அணைத்து அவருக்கு ஆறுதல் கூறினர்.

அடுத்த செய்தி