ஆப்நகரம்

Episode 15: தமிழில் பேசாதவர்களுக்கு இப்படியொரு தண்டனையா?

இன்று நடந்த நாமிநேஷன் ரவுண்டில் பாலாஜி, மும்தாஜ், பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Samayam Tamil 3 Jul 2018, 12:44 am
இன்று நடந்த நாமிநேஷன் ரவுண்டில் பாலாஜி, மும்தாஜ், பொன்னம்பலம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
Samayam Tamil bigg bosss


பிக்பாஸ் வீட்டில் 15ம் நாளில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. வழக்கமாக இது வரையில், பாலாஜியும் அவரது மனைவி நித்யாவுமே சண்டையிட்டும் முகம் சுழித்தும் வந்தனர். ஆனால், அண்மை நாட்களாக யாஷிகாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இருவருக்குள்ளும் நடக்கும் வார்த்தைப் போர், ஒட்டுமொத்த பிக்பாஸ் வீட்டையே கலகலப்பு இழந்து அதிருப்தியில் உள்ளது.

மேலும், பிக்பாஸ் வீட்டில் தமிழ் மொழியில் தான் பேச வேண்டும் என்ற நிபந்தனையை பலர் மீறி வந்தனர். சில பேர் ஆங்கிலம் கலந்த தமிழிலில் பேசி வந்தாலும், பலர் பெரும்பாலான நேரங்களில் ஆங்கிலம் மட்டுமே பேசியுள்ளனர். இது குறித்து கமலிடமும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இனி தமிழில் மட்டும் தான் பேச வேண்டும் என்ற நிபந்தனை கடுமையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிபந்தனையை மீறினால், நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் பிக்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து நாமிநேஷன் ரவுண்ட் நடந்தது. ஒவ்வொருவரும் இரண்டு பேரை சரியான காரணங்களை சொல்லி நாமினேட் செய்ய வேண்டும். நித்யா உட்பட பெரும்பாலோனார் பாலாஜியை நாமினேட் செய்தனர். அடுத்தாக மும்தாஜை நாமினேட் செய்ய தேர்வு பட்டியலில் இடம் பெற்றார்.

ஒட்டு மொத்தமாக பார்த்தோமானால், இன்றைய நாமினேஷன் ரவுண்டில், பாலாஜியை 10 பேர் நாமினேட் செய்தனர். இதற்கு அடுத்தாக மும்தாஜூம், பொன்னம்பலமும் நாமினேட் பட்டியில் உள்ளனர்.

அடுத்த செய்தி