ஆப்நகரம்

Episode 44: பாலாஜி மீது குப்பை கொட்டிய ஐஸ்வர்யா!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், உச்சக்கட்ட கோபத்தில் இருந்த ஐஸ்வர்யா பாலாஜியின் மீது குப்பைகளை கொட்டினார்.

Samayam Tamil 1 Aug 2018, 2:11 am
கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும், முதலாவது சீசன் அளவிற்கு, இந்த சீசனில் சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ரசிகர்கள் குறை கூறிவருகின்றனர்.
Samayam Tamil bigg boss kupppai


இன்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள் போட்டியாளர்கள் மட்டுமில்லாது, ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் ராணி என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஐஸ்வர்யா இருக்கும் நிலையில், இன்று நடந்த டாஸ்கா, இல்லை திட்டமிட்டு வேணும் என்று பிக் பாஸ் செய்கிறாரா என்று தெரியவில்லை. கன்பக்ஷ்ன் ரூம்மில், பாலாஜியை குறித்து குறும்படம் ஒன்றை ஐஸ்வர்யாவுக்கு பிக் பாஸ் போட்டு காட்டுகிறார். இதனால், கோபமடைந்த ஐஸ்வர்யா நேராக வந்து பாலாஜி மீது குப்பை தொட்டியை கவிழத்து குப்பைகளை கொட்டியுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், ஐஸ்வர்யாவை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பாலாஜி கண்ணீருடன் அமைதியாக அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார். இதனிடையே, இந்த அடிதடிக்கெல்லாம் காரணம் நான் தான் என்று மகத் தன்னைத் தானே வருத்திக் கொண்டு செல்கிறார். தூங்கிக்கொண்டிருக்கும் பாலாஜியை எழுப்ப, கரண்டிகளை வைத்து சத்தம் எழுப்புகிறார். முகத்தில் ஸ்பிரே அடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால், பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சற்று பரப்பரப்பகவே காணப்படுகின்றனர்

அடுத்த செய்தி