ஆப்நகரம்

வெளியே வந்து உண்மையை தெரிந்து கொண்ட தர்ஷன் என்ன சொன்னார் தெரியுமா?

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தர்ஷன் முதல் முறையாக தனது மனதில் உள்ளதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Oct 2019, 8:58 am
யாருமே எதிர்பார்க்காத வகையில் தர்ஷனை பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டனர். இதனால் பார்வையாளர்கள் பிக் பாஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
Samayam Tamil tharshan


இந்நிலையில் தர்ஷன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நமக்கு தெரிந்தவர்களிடம் இருந்து அன்பை பெறுவது நன்றாக இருக்கும். ஆனால் நாம் இதுவரை சந்திக்காதவர்களிடம் இருந்து கூட அன்பை பெறுவது தான் இருப்பதிலேயே சிறந்த ஃபீலிங். என் வாழ்வில் இந்த நாள் தான் சிறந்தது.

என்னை தெரிந்திராவர்களின் அன்பு, ஆதரவை உணர்கிறேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பார்த்து, 98 நாட்கள் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வார்த்தையே இல்லை. உங்களை விரைவில் சந்திக்கிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram Love you all ❤️ A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on Sep 29, 2019 at 1:21pm PDT


தர்ஷனின் போஸ்ட்டை பார்த்த அவரின் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி கமெண்ட்டில் கூறியிருப்பதாவது,

வெல்கம் பேக் தர்ஷன். இது வெறும் துவக்கம் தான். இனி உனக்கு நல்ல விஷயங்களே நடக்கும். உன்னை நினைத்து பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

நான் சொன்னபோது தான் நம்பல, இப்பயாவது நம்பு தர்ஷன்: காதலி சனம்

தர்ஷனின் போஸ்ட்டை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ, நாங்கள் ஒன்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பது இல்லை. ஆனால் நீங்கள் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவர். நீங்கள் வெளியேறியபோது அழுதோம். உங்களுக்கு தான் டைட்டில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் மக்கள் மனங்களை வென்றுள்ளீர்கள். நீங்கள் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தர்ஷனுக்கு பட வாய்ப்பு? தயாரிப்பு நிறுவனம் கொடுத்த சர்ஃப்ரைஸ் கிப்ட்!

நீங்கள் தான் உண்மையான வின்னர். உங்களை எவிக்ட் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். விரைவில் உங்களை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கிறோம் என்கின்றனர்.

மக்கள் அனைவரும் உன் மீது அன்பு வைத்துள்ளனர் என்று சனம் ஷெட்டி கூறியபோது நம்பாத தர்ஷன் வெளியே வந்து உண்மையை தெரிந்து கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி