நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் 4 வீட்டுக்குள் போட்டியாளராக செல்லும் முன்பே அவர் மிகவும் பிரபலமான நடிகையாக தான் இருந்தார். அவரது மொட்டைமாடி போட்டோஷூட் அவரை இணையத்தில் வைரலாக்கியது. அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலமாக அதிக அளவு ரசிகர்களை ஈர்த்தார் அவர். அதன் பின் பிக் பாஸ் 4ல் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் மிகவும் ஸ்ட்ராங் ஆன போட்டியாளராக தான் கருதப்பட்டார். அவர் டைட்டில் ஜெயிப்பார் என்று கூட மற்ற போட்டியாளர்கள் சிலர் அவரை பற்றி கூறி வந்தனர். ஆனால் பிக் பாஸ் 4 இறுதிக்கட்டத்தில் ரம்யாவுக்கு இருந்த மவுசு காணாமல் போனது. அவரை பற்றி சமூக வாலித்தலங்களில் அதிக அளவு விமர்சனங்கள் வர தொடங்கின. அதனால் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் 4ல் நான்காவது இடம் மட்டுமே பிடித்தார்.
ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி வீட்டிற்கு மீண்டும் சென்ற போது ரம்யா பாண்டியனுக்கு வீட்டில் இருப்பவர்கள் மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். பட்டாசு, மேள தாளம் முழங்க பூ தூவி அவரை வரவேற்று இருக்கிறார்கள். அதை பார்த்து பூரித்த ரம்யா பாண்டியன் நடு ரோட்டிலேயே குடுபத்தினருடன் நடனம் ஆடி இருக்கிறார்.
ரம்யா பாண்டியனுக்கு சிங்கப்பெண்ணே என ஒரு விருது வழங்கப்பட்ட நிலையில் அதை குறிப்பிட்டு ஒரு கேக்கையும் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.
இந்த வீடியோவை பார்த்து தற்போது பலரும் மிரண்டு இருக்கிறார்கள்..
ஷோவில் இருந்து எலிமினேட் ஆகி வீட்டிற்கு மீண்டும் சென்ற போது ரம்யா பாண்டியனுக்கு வீட்டில் இருப்பவர்கள் மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். பட்டாசு, மேள தாளம் முழங்க பூ தூவி அவரை வரவேற்று இருக்கிறார்கள். அதை பார்த்து பூரித்த ரம்யா பாண்டியன் நடு ரோட்டிலேயே குடுபத்தினருடன் நடனம் ஆடி இருக்கிறார்.
ரம்யா பாண்டியனுக்கு சிங்கப்பெண்ணே என ஒரு விருது வழங்கப்பட்ட நிலையில் அதை குறிப்பிட்டு ஒரு கேக்கையும் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.
இந்த வீடியோவை பார்த்து தற்போது பலரும் மிரண்டு இருக்கிறார்கள்..