ஆப்நகரம்

அந்த நடிகர் தற்கொலைக்கு சனம் ஷெட்டி தான் காரணம்: மீரா மிதுன் அதிர்ச்சி புகார்

சனம் ஷெட்டியுடன் காதலில் இருந்த நடிகர் தற்கொலை செய்துகொண்டது பற்றி மீரா மிதுன் தற்போது பேசி இருக்கிறார்.

Samayam Tamil 21 Oct 2020, 7:49 pm
சனம் ஷெட்டி பற்றி தான் தற்போது தமிழ்நாட்டில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் இன்று சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே ஏற்பட்ட சண்டை தான்.
Samayam Tamil Sanam Shetty


அதன் காரணமாக பிக் பாஸ் ஷோ பரபரப்பாக ஆகி உள்ளது. சனம் ஷெட்டி கோபத்தில் வாடா போடா எனவும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. ப்ரொமோ வீடியோ மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில் ஷோவை பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சனம் ஷெட்டி பற்றி மீரா மிதுன் ட்விட்டரில் அதிர்ச்சி புகார் ஒன்றினை கூறி இருக்கிறார். சனம் ஷெட்டி ஒரு நடிகரின் தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறார் என குற்றம் சாட்டியிருக்கும் அவர், ஏன் இன்னும் சனம் ஷெட்டி கைது செய்யப்படாமல் இருந்திருக்கிறார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

"டுபாக்கூர் பிக் பாஸ் 4 ஷோவில் இருக்கிறார். அவர் ஒரு murderer. அவரது முதல் படம் அம்புலி ஹீரோ இவருடன் இருந்த relationship காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவருக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை என்பது சோகம் அளிக்கிறது. அவரை ஏன் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்" என மீரா மிதுன் கேட்டிருக்கிறார்.


மீரா மிதுன் மற்றும் சனம் ஷெட்டி இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மீரா மிதுன் வென்ற ஒரு அழகி போட்டி டைட்டிலை அவரிடம் இருந்து பறித்து சனம் ஷெட்டிக்கு தான் வழகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி