ஆப்நகரம்

கட்டிப்பிடிப்பதில் சினேகனை மிஞ்சிடுவாரு போல.. வேல்முருகனை விளாசும் நெட்டிசன்கள்

பாடகர் வேல்முருகன் சினேகனை மிஞ்சிவிடுவார் போல இருக்கிறது என ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Samayam Tamil 15 Oct 2020, 1:52 pm
பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட கவிஞர் சினேகன் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அவரது கட்டிப்பிடி வைத்தியம் தான் அவர் மீது வைக்கப்பட்ட முக்கிய விமர்சனம்.
Samayam Tamil Bigg Boss 4 Tamil contestant Velmurugan gets trolled (Pic Credits: Hotstar)


இந்நிலையில் தற்போது நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருக்கும் வேல்முருகன் அவரையே மிஞ்சி விடுவார் போல என கூறி நெட்டிசன்கள் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார்கள். வேல்முருகன் நேற்று சனம் ஷெட்டியிடம் நடந்துகொண்ட விதத்தை பார்த்து தான் இப்படி அனைவரும் கூறி வருகிறார்கள்.

வேல்முருகன் முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த இடம் தெரியாமல் தான் இருந்தார். அவரது காட்சிகள் எதுவும் ஷோவில் இடம்பெறவில்லை. ஆனால் அவர் சமீபத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் சண்டை போட்டது பெரிய பரபரப்பு ஆனது. வேட்டி தொடர்பாக அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று நடந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஜோடியாக பிரிய வேண்டும் என்றும், அந்த போட்டியில் வெற்றி பெரும் நபர் மற்றும் அவருடன் கூட்டணி சேரும் நபர் என இருவரும் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம். அதில் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர்.

இறுதியில் சனம் ஷெட்டி அந்த டாஸ்கில் ஜெயித்தார். அப்போது அங்கு வந்த வேல்முருகன் அவரை கட்டிப்பிடித்து கொண்டாடினர். அதை தான் தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். அவர் சினேகனையே மிஞ்சி விடுவார் போல இருக்கிறதே என தெரிவித்து வருகிறார்கள். மேலும் சனம் ஷெட்டியும் அப்போது uncomfortable ஆகவே உணர்வது போல தெரிகிறது எனவும் குற்றம்சாட்டுகின்றனர்.

அந்த புகைப்படங்களை குறிப்பிட்டு ட்விட்டரில் பலரும் வேல்முருகனை விளாசி வருகிறார்கள். சில ட்விட்கள் இதோ..






அடுத்த செய்தி