ஆப்நகரம்

Yashika Aannand: பாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர்! போதையில் விபத்து ஏற்படுத்தினாரா? வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Tamil Bigg Boss 4: பாலாஜி முருகதாஸ் யாஷிகாவின் நண்பர் என்றும், அவர் போதையில் கார் விபத்து ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் ஜோ மைக்கேல் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

Samayam Tamil 12 Oct 2020, 11:53 am
பிக் பாஸ் 4 வீட்டில் கடந்த வாரம் நடந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி கூறினார்கள். அப்போது பாலாஜி முருகதாஸ் தன் பெற்றோர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததையும், தன்னை சரியாக பார்த்துக்கொள்ளாததை பற்றியும் அவர் பேசி இருந்தார். அதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கண்கலங்கினார்கள். அதன் பிறகு பாலாஜி முருகதாஸ் பற்றி தான் அதிகம் பேச துவங்கி இருக்கிறார்கள்.
Samayam Tamil Balaji Murugadoss


மேலும் பெற்றோர் போதைக்கு அடிமை என கூறுய பாலாஜி முருகதாஸும் உண்மையில் போதை பழக்கம் கொண்டவர் தான் என காட்டி தற்போது அவரது பல பழைய வீடியோக்கள் இணையத்தில் உலா வருகிறது. அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும்போது சரக்கு பாட்டிலை திறந்து அதை அப்படியே தலையில் ஊற்றிக்கொள்ளும் வீடியோ ஒன்றும் வைரலாகி இருந்தது. அதை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸின் முகத்திரை கிழிந்துவிட்டதாக தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சனம் ஷெட்டி வெற்றி பெற்ற அழகி போட்டியை நடத்திய கம்பெனி டுபாக்கூர் என பாலாஜி முருகதாஸ் கூறி இருந்தார். அதனால் அவர்களுக்கு நடுவில் பெரிய பிரச்சனையே நடந்து வருகிறது. அது டுபாக்கூர் என்பதை வெளியில் வந்து நிரூபிப்பதாக சனம் ஷெட்டியிடம் அவர் சவாலும் விட்டார்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் குற்றம்சாட்டிய கம்பெனியை நடத்திவரும் ஜோ மைக்கேல் என்பவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் இது பற்றி அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறி இருக்கிறார். மேலும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை சந்திக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

மேலும் பாலாஜி முருகதாஸ் யாஷிகா ஆனந்தின் நண்பர் என்றும் கடந்த வருடம் அக்டோபர் மாதம் போதையில் காரை ஓட்டிச்சென்று ஓரு டெலிவரி பாய் மீது மோதிவிட்டார் எனவும், அதன் பின் அங்கிருந்து ஓடிப்போய்விட்டார் என்றும் ஜோ மைக்கேல் கூறி உள்ளார்.

ஆனால் யாஷிகா தான் அந்த விபத்தை ஏற்படுத்தியது என செய்தி பரவியது. பாலாஜி முருகதாஸ் விபத்து ஏற்படுத்திவிட்டு அதன் பின் யாஷிகாவுக்கு போன் செய்திருக்கிறார். அங்கு யாஷிகா வந்த போது, அதை பார்த்த மீடியா அவர் தான் விபத்து ஏற்படுத்தியதாக செய்தி வெளியிட்டுவிட்டனர் எனவும் ஜோ மைக்கேல் கூறி உள்ளார்.

அடுத்த செய்தி