ஆப்நகரம்

Bigg Boss 4 Highlights: சண்டை ஆக மாறிய டாஸ்க், வெளியேற விரும்பும் சுரேஷ்! பிக் பாஸ் அப்டேட்

பிக் பாஸ் வீட்டில் இன்று சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டி இடையே சண்டை மிக மோசமாக மாறியுள்ளது.

Samayam Tamil 21 Oct 2020, 11:25 pm
பிக் பாஸ் 4 வீட்டில் 17ம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு..
Samayam Tamil Sanam Shetty - Suresh Chakravarthy (Pic Credits: Hotstar)


நாடா இல்லை காடா டாஸ்க்..

நேற்று நடந்த நாடா அல்லது காடா டாஸ்க் இன்றும் தொடர்ந்து நடந்தது. ஆனால் இன்று அணிகள் மாற்றப்பட்டு இருந்தன. நேற்று அரக்கர்களாக இருந்த சுரேஷ் சக்ரவர்த்தி டீம் இன்று அரசர் குடும்பமாக மாறி இருந்தது. நேற்று அரச குடும்பமாக இருந்தவர்கள் இன்று டஅரக்கர்களாக மாறி இருந்தனர்.

ஜெயித்த அர்ச்சனா..

டாஸ்க் தொடர்ந்த நிலையில் முதலில் அரச குடும்பத்தை சேர்ந்த அர்ச்சனா வெளியில் வந்தார். ஆனால் அவரை அரக்கர்களால் அசைய வைக்க முடியவில்லை, அதனால் அவர் ஜெயித்து மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.

சண்டை போட்ட ஆரி

ஆரி வெளியில் வந்த போது அரக்கர் கூட்டத்தை சேர்ந்த ரியோ அவர் கண்ணில் ஆரஞ்சு பழ தோளில் வரும் சாற்றை அடித்தார். அதனால் ரியோ அசைந்துவிட்டார். அதன் பிறகு ஆரி அதற்காக சண்டை போட்டார். ஆனாலும் ஆரி தோற்றுவிட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். அதனால் அவரை கூட்டி சென்று அவர் முகத்தில் கரியை பூசினர்.

அதன் பின் வந்த ஜித்தன் ராமேஷ் அசையாமல் நின்று ஜெயித்தார்.

மிளகாய் பொடி சண்டை

அரக்கர்கள் டீம் ஸ்பிரே உள்ளிட்ட பலவற்றை அடித்து வெளியில் வருபவர்களை அசைய வைக்க முயற்சித்தனர். அதன் பின் இடைவேளையில் அரக்கராக இருந்த பாலாஜி முருகதாஸ் வீட்டுக்குள் ஓடிச்சென்று மிளகாய் பொடியை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடி வந்தார். ஆனால் அது கீழே விழுந்ததால் அதனால் இரண்டு டீமுக்கும் நடுவில் சண்டை நடந்தது.

கோபத்தில் கத்திய சனம் ஷெட்டி.. மன்னிப்பு கேட்ட சுரேஷ்

சுரேஷ் சக்ரவர்த்தி நிஷாவை அடித்து விளையாடி கொண்டிருந்த நிலையில் ஒரு முறை சனம் ஷெட்டி தலையில் தட்டிவிட்டார். அதனால் அவர் சண்டை போட துவங்கினார்.

வாயா போயா என பேசி அதன்பின் அவன் இவன், வாடா போடா என்று கூட பேச துவங்கினார் சனம். அதன் பின் சுரேஷ் சக்ரவர்த்தி தான் செய்தது தவறு தான் என கூறி மன்னிப்பு கேட்க வைத்தார்.

சுரேஷ் அதன் பின் கேமரா முன்பு தான் விளையாட்டுக்காக செய்தது இப்படி ஆகிவிட்டது, சனம் என தெரிந்திருந்தால் தொட்டிருக்க கூட மாட்டேன் என தெரிவித்தார்.

கன்பெஷன் ரூமில் கதறி அழுத சுரேஷ்

சுரேஷ் சக்ரவர்த்தி தான் செய்தது தவறு தான் என்றும், அதனால் உடனே என்னை வெளியேற்றி விடுங்கள் என்றும் பிக் பாஸிடம் கூறினார். அதன் பின் தான் விளையாட்டாக அதை செய்தததாக கண்ணீர் விட்டார்.

அதன் பின் பிக் பாஸ் 'நீங்கள் இதை தெரிந்து செய்யவில்லை. மன்னிப்பு கேட்டுவிட்டீர்கள். அவர்களும் ஏற்று கொண்டார்கள். மற்ற விஷயங்களை பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அதனால் விளையாட்டை தொடர்ந்து விளையாடுங்கள். மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்' என அட்வைஸ் செய்து சுரேஷை அனுப்பி வைத்தார்.

அடுத்த செய்தி