ஆப்நகரம்

Bigg Boss 4 ஹைலைட்ஸ்: வெங்காயம் வெட்டுவதில் தொடங்கிய அனிதா சம்பத் - சுரேஷ் சக்ரவர்த்தி சண்டை

பிக் பாஸ் 4 வீட்டில் மூன்றாம் நாளில் மீண்டும் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் இடையே வாக்குவாதம், மற்றும் சில போட்டியாளர்கள் கண்ணீர் கதை ஆகியவை காட்டப்பட்டது.

Samayam Tamil 8 Oct 2020, 4:06 pm
பிக் பாஸ் மூன்றாம் நாளில் நடந்த சம்பவங்கள் பற்றிய முழு விவரங்கள்
Samayam Tamil Bigg Boss 4 Suresh Chakravarthy


செய்தி வாசித்த - அனிதா சம்பத்

பிக் பாஸ் 4 வீட்டில் இரண்டாம் நாள் நடந்த சம்பவங்களில் அடிப்படையில் youtube கன்டென்ட் போல பேசி காட்டினார் அனிதா சம்பத். அதற்கு மற்றவர்கள் அவரை பாராட்டினார்கள்.

கேப்ரியலா - கடந்து வந்த பாதை

நடிகை கேப்பிரியலா தான் சிறு வயதில் இருந்தே ஒல்லியாக இருப்பது பற்றி மற்றவர்கள் தன்னை கிண்டல் செய்தது பற்றி பேசினார். கடந்த ஒரு வருடமாக தான் ஜிம் சேர்ந்து இப்போது உடல் எடையை கூட்டியதாக அவர் கூறினார்.

வெங்காயம் வெட்டுவதில் துவங்கிய பிரச்சனை..

பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களுக்கும் நடிகர் ஆரி வீட்டின் விதிமுறைகள் பற்றிய புத்தகத்தை படித்து காட்டி கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் ரேகா இருவரும் சமைத்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த அனிதா சம்பத், நான் வெங்காயம் வெட்டுகிறேன் என ரேகாவிடம் கேட்டார். அனிதா சம்பத் பேசிக்கொண்டிருந்ததால் ஆரி பேசுவது கேட்கவில்லை, அதனால் பேசாமல் இருங்கள் என கேட்டுக்கொண்டார். அதனால் தொடங்கிய வாக்குவாதம் பெரிதாகி 'இனி என்னிடம் நீ பேசாதே' என கூறும் அளவுக்கு ஆகிவிட்டது.

ரேகா - கடந்த வந்த பாதை

நடிகை ரேகா தான் கடந்து வந்த பாதை பற்றி மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார். சினிமா என்றால் என்ன என்றே தெரியாமல் பாரதிராஜா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி ரேகா பேசினார்.

"பாரதிராஜா என்றால் யார் என்று கூட எனக்கு தெரியாது. தெரிந்த ஒருவர் மூலமாக அவரை சந்தித்த போது, படம் பார்த்திருக்கியா என கேட்டார், நான் பார்த்ததே இல்லை என கூறினேன். அதற்க்கு பிறகு எறும்பு போவதை பார்ப்பது போல செய் என்றார். நான் செய்ததும் உடனே என்னை படத்தில் நடிக்க வைத்தார்" என ரேகா கூறினார்.


சம்யுக்தா - கதை

சம்யுக்தா தான் வாழ்க்கையில் பெரிய கஷ்டம் எதுவும் படவில்லை என்றாலும் சில சவால்களை சந்தித்திருக்கிறேன் என்றும், தன் குழந்தைக்கு ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுத்தேன் என்றும், அவர் ஒருமுறை கேரட் சாப்பிடும் போது அது மூச்சு குழாயில் சிக்கி கொண்டு ஒரு பக்க நுரையீரல் கருப்பாக ஆகி இருந்தது என்றும், அதை ஆபரேஷன் செய்து எடுப்பதற்குள் உயிர் போய் வந்துவிட்டது என உருக்கமாக பேசி இருந்தார்.

அதன் பின் சம்யுக்தா ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுத்ததற்கு சுரேஷ் சக்கரவர்த்தி அவரை பாராட்டினார்.

ஆரி - கடந்து வந்த பாதை

நடிகர் ஆரி தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் பற்றி பேசினார். படிப்பு வராததால் வீட்டில் இருந்து 10 ஆயிரம் ருபாய் மட்டும் வைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறி அதன் பின் பல இன்னல்களை சந்தித்து இன்னும் பெரிய வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருவது பற்றி ஆரி பேசினார்.

மீண்டும் கிச்சனில் வாக்குவாதம்

குக்கிங் டீமில் இருந்தவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டின் தலைவர் ரம்யா பாண்டியனை அழைத்து பேசினார். அதன் பின் அது பற்றிய வாக்குவாதம் சற்று நேரம் நடந்தது.

அடுத்த செய்தி