ஆப்நகரம்

பிக் பாஸ் 4 ப்ரொமோ: சுரேஷ் சக்ரவர்த்தி எடுத்த அதிர்ச்சி முடிவு, குறும்படம் போட்டே ஆகணும்..

பிக் பாஸ் 4வது சீசனில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை தொடர்ந்து வருகிறது. தான் குக்கிங் டீமில் இருந்து விலகுவதாக சுரேஷ் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

Samayam Tamil 8 Oct 2020, 3:39 pm
முந்தைய சீசன்களை போல இல்லாமல் பிக் பாஸ் நான்காவது சீசன் ஆரம்பத்திலிருந்தே போட்டியாளர்களின் நடுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரபரப்பாக ஆகி இருக்கிறது.
Samayam Tamil Bigg Boss 4 Suresh Chakravarthy and Anitha Sampath fight


பிக் பாஸ் 4 வீட்டில் இந்த வார தலைவராக ரம்யா பண்டியன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சமையல் செய்யும் டீமில் ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் என நான்கு பேர் இருந்து வருகிறார்கள். இதில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே தான் முதல் நாளிலிருந்தே வாக்குவாதம் தொடங்கி தற்போது சண்டையாக மாறி இருக்கிறது.

குறும்படம் போட்டால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரும் என முதலில் இருந்தே இருவரும் மாறி மாறி கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நான்காவது நாள் ப்ரோமோ வீடியோ தற்போது வெளிவந்திருக்கிறது. அதில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் இடையே நடக்கும் பிரச்சனை தொடர்ந்து காட்டப்பட்டு இருக்கிறது. சுரேஷ் சக்ரவர்த்தி தான் குக்கிங் டீமில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார். அது தனக்கு விருப்பமில்லை என ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவரும் தெரிவிக்கின்றனர். அதன் பின் அதற்கான காரணம் கேட்டபோது "எனக்கு உங்களுடன் பிரச்சனை இல்லை இந்த அம்மா (அனிதா சம்பத்) உடன் தான் என கூறுகிறார். அதற்கு அனிதா சம்பத் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் என கேட்க, 'உனக்கு நான் சொன்னால் புரியாது, குறும்படம் போட்டு காட்ட வேண்டும்' என கோபத்துடன் கூறுகிறார்.


அதைக் கேட்டு அங்கிருந்து எழுந்து சென்ற அனிதா சம்பத் 'நான் என்ன அக்கா பண்ணேன், தற்போது வெளியில் வந்து என்னை நோண்டுகிறார்' என அழுதுகொண்டே அறந்தாங்கி நிஷாவிடம் கூறுகிறார்.

இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ‘கோபப்படுபவரை நம்பி விடலாம், ஆனால் அழுபவரை நம்ப கூடாது’ என கூறி வருகின்றனர்.


மேலும் ஒரே ஒரு பிரச்சனைக்காக ஒட்டு மொத்த வாரத்தையும் காலி செய்துவிட்டார்கள் எனவும் கூறி மீம்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி