ஆப்நகரம்

Bigg Boss 4 Highlights: சுசித்ரா-பாலா சண்டை, மீண்டும் தலைவர் ஆனா ரியோ

ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட பாலா மற்றும் சுசித்ரா இருவரும் சண்டை போட்டனர், அடுத்த வார கேப்டனாக ரியோ தேர்வாகி உள்ளார். மேலும் என்னவெல்லாம் நடந்தது.. முழு விவரங்கள் உள்ளே.

Samayam Tamil 20 Nov 2020, 10:47 pm
பிக் பாஸ் 4 வீட்டில் 47ம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு.
Samayam Tamil Balaji Murugadoss and Suchitra fight in Jail (Pic Credits: Hotstar)


ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட பாலாஜி - சுசித்ரா

இந்த வாரம் நடந்த மணிக்கூண்டு டாஸ்கில் கடைசி இடம் பிடித்த சுசித்ரா, பாலாஜி, ரம்யா பாண்டியன் ஆகிய மூவரில் இருவரை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் கூறினார். அதனால் அனைவரும் சேர்ந்து பாலாஜி மற்றும் சுசித்ராவை ஜெயிலுக்கு அனுப்பினர்.

அப்போது பாலாஜி எதோ கேள்வி கேட்க உடனே சுசித்ரா அதில் இடையில் பேசினார். அதனால் பாலாஜி கோபப்பட்டு அவரை திட்டினார்.

அதன் பின் கேப்டன் ஆஜித் சாவியை எடுத்து வந்து இருவரையும் கண்ணாடி அறையில் அடைத்தார். அதன் பின் தான் பிரச்சனையே துவங்கியது.

திட்டிய ரியோ.. அழுத நிஷா

தனக்காக அதிக நேரம் சாப்பிடாமல் காத்திருந்த நிஷாவை ரியோ திட்டினார். அதனால் வருத்தம் அடைந்த நிஷா கண்ணீர் விட்டார். ஏற்கனவே குரூப்பிஸம் பற்றி பேசினார்கள், இப்படி இருந்தால் எப்படி என ரியோ கேட்டார்.

சுசித்ரா - பாலாஜி சண்டை


சிறையில் இருக்கும் பாலாஜி மற்றும் சுசித்ரா இடையே சண்டை வெடித்தது. ஷிவானி தன்னை வந்து முறைப்பதாக பாலாஜியிடம் கூறினார் சுசித்ரா. 'உன் ஆளு' என அப்போது அவர் குறிப்பிட்டது பாலாஜிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் பின் க்ரூப்பிசம் பற்றியும் சுசித்ரா பேசினார். அப்படி எதுவும் இல்லை என பாலாஜி கூறினாலும் சுசித்ரா விடாமல் பேசினார். அதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாலாஜி 'உன்னுடன் என்னை இங்கு அனுப்பி சாவடிக்குறாங்க' என சொன்னார். அதன் பின் ஒரு கட்டத்தில் 'இதை இனி பொறுக்க முடியாது என கூறி கத்தினார்.

தலைவர் டாஸ்க்

மணிக்கூண்டு டாஸ்கில் ஜெயித்த 6 பேர் அடுத்த வார தலைவர் டாஸ்கில் பங்கேற்க தேர்வாகி இருந்தனர். இறுதியில் ஆரி மற்றும் ரியோ இடையே தான் போட்டி இருந்தது. ரியோ தான் ஜெயித்து அடுத்த வார தலைவர் ஆனார்.

ரியோ அதற்கு பிறகு அடுத்த வார டீமை பிரித்தார்.

ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலாஜி, சுசி

இன்று இரவே சுசித்ரா மற்றும் பாலாஜி இருவரும் ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இரவு போட்டியாளர்களுக்கு பரோட்டா பாணி பூரி உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வந்திருந்த நிலையில் அவர்கள் வீட்டுக்குள் மீண்டும் அனுப்பப்பட்டனர்.

அடுத்த செய்தி