ஆப்நகரம்

Bigg Boss 4 Highlights: ரியோவை வறுத்தெடுத்த அனிதா, சனம் - ஜித்தன் ரமேஷ் இடையே வெடித்த சண்டை

பிக் பாஸ் 4 வீட்டில் 59ம் நாள் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என பாருங்கள்.

Samayam Tamil 2 Dec 2020, 11:11 pm
59ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு
Samayam Tamil Bigg Boss 4 Tamil Day 59 Highlights (Pic Credits: Hotstar)


காலை டாஸ்க் - சோம் மீது கோபப்பட்ட சனம்

தினமும் காலையில் நடக்கும் டாஸ்கில் சோம் சேகர் 'குமாரு' என்ற வார்த்தையை எத்தனை மாடுலேஷனில் பேசலாம் என பேசி காட்டினார். அதில் அவர் பேசியது பற்றி சனம் ஷெட்டி கோபத்துடன் பேசினார். மேலும் அர்ச்சனா bossy குமாரு என கேபி கூறியதால் அவர் அதிக நேரம் கோபத்துடன் இருந்தார்.

ரம்யா - ஷிவானி போன் கால்

கால் சென்டர் டாஸ்க் தொடர்ந்து நடந்த நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி பேசிக்கொண்டனர். ரம்யா சிரித்துக்கொண்டே soft hurt செய்வது பற்றி ஷிவானி கேட்டார். இறுதியில் ரம்யா கால் வைக்காத காரணத்தினால் ஷிவானி நாமினேட் ஆனார்.

ரியோ - அனிதா கால்

அடுத்து அனிதா ரியோவிடம் போன் செய்து பேசினார் அனிதா. நீங்கள் இந்த பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்க என்ன quality இருக்கிறது என சொல்லுங்கள் என அனிதா கேட்டார். தான் gentleman ஆக இருக்கிறேன், நேர்மையாக இருக்கிறேன் என பதில் சொன்னார். ஆனால் அனிதா அதிக ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பின் குரூப்பிஸம் பற்றி பேச தொடங்கினர். உங்களிடம் நான் சண்டை போடும் போது மட்டும் எப்படி எனக்கு 8 நாமினேஷன் ஓட்டுகள் வந்தது என கேள்வி கேட்டார்.

நீங்கள் தனி ஆளாக தான் விளையாடுகிறீர்களா இல்லை யாரையாவது முன்னிலை படுத்தி விளையாடுகிறீர்களா என அனிதா கேட்ட நிலையில் அவர் நான் தனியாக தான் விளையாடுகிறேன் என சொன்னார். ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லை என்று அனிதா கருத்து கூறினார்.

இறுதியில் அனிதா நாமிநேட் ஆனார்.

அதன் பின் அனிதா வேண்டுமென்றே தன்னை poke செய்ய பல விஷயங்கள் பேசினார் என ரியோ சோமிடம் பேசும்போது கூறினார்.

நிஷா - ஜித்தன் ரமேஷ் போன் கால்

அடுத்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் மிகவும் காமெடியாக போனில் பேசிக்கொண்டனர். அப்போது நிஷா பாட்டு பாடினார். அதை கேட்டு ரியோ, சோம் உள்ளிட்டவர்கள் நிஷாவை கலாய்த்தனர்.

டாஸ்க் ரேங்க்

கால் சென்டர் டாஸ்கில் போட்டியாளர்கள் செய்த விதம் பற்றி ரேங்க் அளிக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது. அப்போது ஜித்தன் ராமேஷ் மற்றும் சனம் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இதன் முடிவுகள் நாளை தான் தெரியவரும்.

அடுத்த செய்தி