ஆப்நகரம்

Bigg Boss 4 Highlights: புதிய நாமினேஷன் லிஸ்ட், அனிதா - ஆரி இடையே வெடித்த மோசமான சண்டை

பிக் பாஸ் வீட்டில் இன்று அனிதா மற்றும் ஆரி இடையே பெரிய சண்டையே நடந்திருக்கிறது. மேலும் என்னவெல்லாம் நடந்தது என பாருங்கள்.

Samayam Tamil 21 Dec 2020, 11:27 pm
பிக் பாஸ் வீட்டில் இன்று78ம் நாள் நடந்த சம்பவங்களின் தொகுப்பு..
Samayam Tamil bigg boss 4 tamil day 78 written updates nomination list anitha fights with aari for using her husband name
Bigg Boss 4 Highlights: புதிய நாமினேஷன் லிஸ்ட், அனிதா - ஆரி இடையே வெடித்த மோசமான சண்டை


நாமினேஷன்

இன்று திங்கட்கிழமை என்பதால் நாமினேஷன் நடைபெற்றது. கன்பெக்ஷன் ரூமில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சென்று தங்களுக்கு பிடிக்காத இருவரை நாமினேட் செய்தனர். வழக்கம் போல அதற்காக பல்வேறு காரணங்களையும் கூறினார்.

நாமினேஷன் லிஸ்டை பிக் பாஸ் காரணங்களுடன் அறிவித்தார்.

அனிதா - தவறா influence ஆகி இருக்காங்க

ஆரி - நெகட்டிவிட்டி கொடுக்குறாங்க, blame game விளையாடுகிறார்

ஷிவானி - Involvement கம்மியா இருக்கு, இந்த வீட்டில் எதுவும் பெருசா பண்றதில்லை.

கேபி - Participation மற்றும் Contribution Nil ஆக இருக்கிறது

ஆஜித் - டாஸ்கில் கோபப்பட்டு involvement காட்டவில்லை.

இந்த வாரம் கேபி தான் அவுட்டா? கலாய்த்த ரியோ, சோம்

இந்த வாரம் கேபி தான் வெளியே போவார் என கூறி அவரை ரியோ மற்றும் சோம் கலாய்த்தனர். தங்கள் குடும்பத்திற்கு ஒரு மெசேஜ் கொடுப்பதாகவும் அதை அவர்களிடம் வெளியில் போய் சொல்லிவிடு என கேபியை அவர்கள் கலாய்த்தனர்.

அன்பு கேங்கில் அவர்கள் மூவர் மட்டுமே மிஞ்சி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷிவானி - பாலாஜி சண்டை

ஷிவானி கிட்சனில் பால் ஊற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கேப்டன் பாலாஜி, இந்த வாரத்திற்கான பால் கணக்கு, எல்லா நாளுக்கும் வருமா என்பது உள்ளிட்ட விவரங்களை பேசினார். நான் கிட்சன் டீமில் இல்லை, volunteer செய்ய தான் வந்தேன் என பாலாஜி மீது கோபப்பட்டார் ஷிவானி.

நான் என்னமோ பால் அதிகம் எடுத்துக்கொள்கிறேன் என்பது போல நீங்கள் பேசியது இருக்கிறது என நீண்ட நேரமாக இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.

அதன் பின் பால் இந்த வாரம் முழுவதும் வருமா என்பது பற்றி பாலாஜி அனைவர் முன்னிலையிலும் பேசினார். அப்போது கிட்சன் டீம் கேப்டன் அனிதா, 'எனக்கு காபி, டீ போட தெரியாது, அதனால் இந்த கணக்கு எனக்கு தெரியாது' என கூறினார். இது தொடர்பாக பாலாஜி மற்றவர்களிடம் புகார் கூறினார்.

ஆரி - அனிதா சண்டை

அதன் பின் பாலாஜி ஒரு புதிய டாஸ்க் கொடுத்தார். அதில் போட்டியாளர்கள் மற்றொருவர் கையை அடிக்க வேண்டும் என்றும், சீட்டில் இருக்கும் வார்த்தையை மையப்படுத்தி அடி வாங்கிய நபரிடம் ஒரு கேள்வியை அவர் கேட்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

இந்த டாஸ்க் துவங்கியதுமே பலரும் தங்கள் பழைய பகையை எல்லாம் மனதில் வைத்து பேச தொடங்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே ஆரி மற்றும் அனிதாவுக்கு வாக்குவாதம் நடந்து கொண்டு தான் இருந்தது. ஒரு கட்டத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது அனிதாவின் கணவர் பெயரை ஆரி சொல்லிவிட்டார். உடனே பொங்கிய அனிதா 'என கணவர் பெயரை சொல்லாதே' என கோபத்துடன் கத்தினார். 'நான் எதுவும் தவறாக சொல்லவில்லை. நீங்கள் சொன்னதை தான் நான் இங்கே அப்படியே சொல்கிறேன்' என ஆரி விளக்கம் அளித்தாலும் அவர் கேட்கவில்லை.

சண்டை தொடர்ந்து நடைபெற்றது. அனிதாவுக்கு ஆதரவாக ரம்யா நரித்தந்திரத்துடன் அவரிடம் பேசினார். ஏற்கனவே ரம்யா ஆரிக்கு எதிராக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

அதன் பின் கேமரா முன்பு வந்து பேசிய ஆரி அனிதா குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டார். தான் எந்த தவறான நோக்கத்துடனும் உங்கள் பெயரை சொல்லவே இல்லை என விளக்கம் கொடுத்தார்.

அடுத்த செய்தி