ஆப்நகரம்

Bigg Boss 4 Highlights: புயலால் வெளியேறிய போட்டியாளர்கள், ஜெயிலில் ரியோ

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் நிவர் புயல் காரணமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

Samayam Tamil 27 Nov 2020, 11:17 pm
பிக் பாஸ் வீட்டில் 54ம் நாள் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு..
Samayam Tamil Bigg Boss Housemates go out due to Nivar cyclone (Pic Credits: Hotstar)


நிஷா - அனிதா கால்

நிஷா கன்பெக்ஷன் ரூமில் இருந்து அனிதாவுக்கு கால் செய்தார். பிக் பாஸ் தொடங்கிய முதலில் என்னுடன் நெருக்கமாக இருந்த நீ ஏன் அதற்கு பிறகு பிரிந்து சென்றுவிட்டாய் என கேள்வி கேட்டார். அங்கு இருந்தால் நான் தனியாக முடிவு எடுக்க முடியவில்லை, அதனால் தான் என விளக்கம் கொடுத்தார் அனிதா. அதன் பின் தான் ரியோ மீது வைத்திருக்கும் அன்பு பற்றிய விளக்கத்தையும் நிஷா சொன்னார். இறுதி வரை காலை அனிதா வைக்கவில்லை என்பதால் நிஷா நாமினேஷனுக்கு தேர்வானார்.

நட்பா காதலா? ஷிவானி சொன்ன பதில்

அடுத்து இரண்டாவதாக ஷிவானிக்கு ஆரி போன் செய்தார். பாலாஜியுடன் இருப்பது நட்பா அல்லது காதலா என கேட்டார். இது அன்பு கலந்த நட்பு என்று மட்டுமே காதல் எல்லாம் இல்லை என ஷிவானி பதில் அளித்தார்.

சனம் - ரியோ பிரிவு

ஏற்கனவே ரியோ மற்றும் சனம் சண்டை போட்ட நிலையில் இன்று வாக்குவாதம் இருந்தது. நாம் பேச்சுவார்த்தை இருக்கும் அளவுக்காவது harmony இருக்க வேண்டும் என சனம் கேட்டார். ஆனால் ரியோ வேண்டாம் என அவர் முகத்தில் அறைந்தது போல பேச விருப்பம் இல்லை என சொல்லிவிட்டார்.

நிவர் புயல் - வெளியேறிய போட்டியாளர்கள்

புயல் காரணமாக போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டை காலி செய்துவிட்டு வேறொரு பாதுகாப்பான் இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின் மறுநாள் தான் மீண்டும் போட்டியாளர்கள் வீட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர்.

தூங்குவதில் சண்டை

ரியோ கேப்டனாக இருக்கும் நிலையில், நேற்று சரியாக தூங்கவில்லை பகலில் தூங்க அனுமதியுங்கள் என சனம் துணை கேப்டன் ஷிவானி மூலமாக கேட்டார். அதற்கு ரியோ சனமை அசிங்க அசிங்கமாக கேட்பேன் என கோபத்துடன் கூறினார். இது arrogance என சனம் ரியோவிடம் சண்டை போட்டார்.

மேலும் நிஷா தூங்கியதால் நாய் கத்தியது. ஆனால் ரியோ அதை சரியாக கண்டு கொள்ளக்கூட இல்லை.

ஒத்திவைக்கப்பட்ட டாஸ்க்

இந்த கால் சென்டர் டாஸ்க் அடுத்த வாரத்திற்க்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட மூன்று பேரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டபோது அனைவரும் சேர்ந்து பாலா, ரம்யா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரை தேர்ந்தெடுத்தனர்.

ஜெயிலில் ஆரி, ரியோ

இந்த வாரம் முழுவதும் ஈடுபாடு குறைவாக இருவரை நாமினேட் செய்ய வேண்டும் என கூறப்பட்ட போது ஆரி மற்றும் ரியோ ஆகியோரை தேர்ந்தெடுத்தனர். அவர்கள் இருவரையும் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர்.

அடுத்த செய்தி