ஆப்நகரம்

Bigg Boss 4 Tamil: த்தூ.. நான் துப்பினது எச்சி தெறிக்கலயே! வெளுத்து வாங்கிய கமல் ஹாசன்

சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் இடையே நடந்த சண்டை பற்றி கமல் இன்று பேசி இருக்கிறார். என்ன சொல்லி இருக்கிறார் என பாருங்கள்.

Samayam Tamil 10 Oct 2020, 6:54 pm
பிக் பாஸ் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் இன்று வீட்டுக்கு வந்திருக்கிறார். போட்டியாளர்களுடன் அவர் உரையாடி இருக்கும் விஷயம் தற்போது மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் அவர் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனை பற்றி கோபத்துடன் பேசியிருக்கிறார்.
Samayam Tamil Kamalhaasan and Suresh Chakravarthy


"ஒரு சின்ன ஜோக்கில் ஆரம்பித்து தற்போது தொடர் கதையாக போய்க் கொண்டிருக்கிறது. இதை இடையில் இருந்து பார்ப்பவர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக சண்டை போட்டு வருகிறார்கள் போலிருக்கிறது என நினைப்பார்கள். பின்பு கிட்ட வந்து பார்த்தா தான் தெரிகிறது. த்து இவ்வளவு தானா என்பார்கள்.

'இப்போது துப்பிய போது எச்சில் தெறிக்க வில்லையே சுரேஷ் சக்கரவர்த்தி' என கமல்ஹாசன் கேட்கிறார். அதன் பின் 'நான் கோபத்தில் கூறிவிட்டேன்' என சுரேஷ் சக்ரவர்த்தி சொல்ல, "கோபத்தில் ஒரு வார்த்தை சொல்லும் முன் அந்த பத்து விரலையும் எண்ணி விட்டு பேசுங்கள்" என சொன்னார் கமல்.


இன்று இரவு போட்டியாளர்களை கமல்ஹாசன் வெளுத்து வாங்க போகிறார் என்பது இந்த ப்ரோமோ வீடியோவை பார்க்கும் போது நமக்கு தெளிவாக தெரிகிறது. ஒரு வாரமாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனை இன்றாவது முடிவு பெறுமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

அனிதா பற்றி பேசும்போது கோபத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி பல்வேறு வார்த்தைகளை கூறி இருந்தார். அனிதாவுக்கு வெஷம் அதிகம் என நேற்று அவர் கூறி இருந்தார். அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என ரம்யா பாண்டியன் கூட அவரிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி