ஆப்நகரம்

Bigg Boss 5: தலைவர் போட்டியில் ஜெயித்த பிரியங்கா! ஆனால் கடைசியில் வந்த ட்விஸ்ட்

பிக் பாஸ் வீட்டில் இன்று அடுத்த வார தலைவரை தேர்வு செய்யும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இறுதியில் பிரியங்கா மற்றும் மதுமிதா ஆகியோர் போட்டியிட்டனர்.

Samayam Tamil 26 Oct 2021, 8:15 am
பிக் பாஸ் 5ம் சீசன் வீட்டில் நேற்று நான்காவது வார தலைவரை தேர்வு செய்ய போட்டி நடத்தப்பட்டது. அதில் name கேம் முதலில் நடத்தப்பட்டது. பிரியங்கா தான் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
Samayam Tamil Priyanka


போட்டியாளர் ஒருவர் ஒரு பெயர் சொல்ல வேண்டும், அந்த நபர் வேறு ஒருவர் பெயரை சொல்ல வேண்டும், அப்படி சொல்லாமல் சொன்னவர் பெயரையே திரும்ப சொன்னால் அல்லது பதிலே சொல்லாமல் விட்டாலும் அவுட் என கண்டிஷன் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த போட்டியில் கடைசி இருவராக பிரியங்கா மற்றும் மதுமிதா ஆகியோர் வந்தனர். அதனால் இறுதியில் அவர்களுக்கு தனியாக டாஸ்க் நடத்தப்பட்டது. அவர்கள் பந்தை பிடித்து கூடையில் போட வேண்டும் என சொல்லப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் போட போட அவர்கள் வலையில் பிடித்து பாஸ்கெட்டில் போட்டனர். அதன் பின் சிபி வந்து அதில் எத்தனை பந்துகள் இருக்கிறது என எண்ணினார்.

அதில் மதுமிதாவுக்கு 22 பந்துகளும், ப்ரியங்காவுக்கு 23 பந்துகளும் இருந்தது. அதனால் ப்ரியங்கா தான் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது கூடையில் இரண்டு பந்துகள் நேராக விழுந்துவிட்டது, என்ன செய்யலாம் என சிபி கேட்டார்.

அதிக கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது என பிக் பாஸ் அறிவித்தார். அதனால் பிரியங்கா தோற்றதாக அறிவிக்கப்படுகிறது.

அடுத்த செய்தி