ஆப்நகரம்

கேப்டனை அழ வெச்சிட்டாங்களே.. பிக் பாஸ் 5 இன்றைய இரண்டாம் ப்ரோமோ

இசைவாணிக்கு தான் பவர் என்றால், பிக் பாஸ் வீட்டில் எதற்கு டம்மியாக கேப்டன் என மதுமிதா இன்று அழுது புலம்பி இருக்கிறார்.

Samayam Tamil 28 Oct 2021, 1:03 pm

ஹைலைட்ஸ்:

  • நெருப்பு காயின் வைத்திருக்கும் இசைவாணிக்கு தான் பவர்.
  • நான் தூங்காதீங்க என சொல்வதற்க்கு மட்டும் கேப்டனா? கதறி அழுத மதுமிதா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Madhumitha Bigg Boss 5
பிக் பாஸ் வீட்டில் இது நெருப்பு வாரம் என சொல்லி அந்த காயின் வைத்திருக்கும் இசைவாணிக்கு முழு வீட்டையும் கண்ட்ரோல் செய்யும் பவர் கொடுக்கிறார் பிக் பாஸ். அவருக்கு வேண்டியதை மற்றவர்களை வைத்து செய்துகொள்ளலாம் எனவும் பிக் பாஸ் கூறி இருக்கிறார்.
இசைவாணி தான் அனைத்தையும் கண்ட்ரோல் செய்கிறார். ஆனால் இந்த வார கேப்டன் எதற்கு டம்மியாக என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது. இந்த வார கேப்டன் மதுமிதா இதை சொல்லி அழுதிருக்கிறார்.

"அவங்களை விட கஷ்டம் எனக்கு. நான் என்ன சொன்னாலும் யாரும் கேட்பதில்லை. இது அவங்க வாரம் என சொல்லி ரூல்பண்றங்க , அப்போ நான் எதுக்கு. நான் எதுவும் செய்யவில்லை என சொல்லி என்னை weakest என தேர்ந்தெடுத்தீர்க்ள்."

"நான் செய்யும் ஒரே வேலை என்னவென்றால் மற்றவர்கள் தூங்க வேண்டாம் என சொல்வது மட்டும் தான்" என சொல்லி மதுமிதா அழுகிறார். இந்த குழப்பத்தை பற்றி பிக் பாஸிடம் சொல் என மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர் விடுகின்றனர்.

ப்ரோமோ இதோ..

அடுத்த செய்தி