ஆப்நகரம்

அரசியலில் லோஸ்லியா? அதிர வைத்த கட்சிக் கொடிகள்!

பிக் பாஸ் புகழ் லோஸ்லியாவிற்கு அவரது ரசிகர்கள் பேனர் வைத்து கட்சி கொடிகளையும் உருவாக்கியுள்ளனர்.

Samayam Tamil 23 Jul 2019, 3:38 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் இலங்கையைச் சேர்ந்த லோஸ்லியாவும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதில், பிக் பாஸ் முதல் சீசனில் மிகவும் பிரபலமடைந்த ஓவியாவைப் போன்று இல்லாமல், அதற்கு மேல் பிரபலமாகி வருவது என்றால் அது லோஸ்லியா மட்டுமே.
Samayam Tamil 1


வீட்டுக்குள் வந்ததிலிருந்து எப்போதும் உண்மையை மட்டுமே பேசி வருகிறார். யாருடைய வீண் வம்புக்கும் போவதில்லை. தானுண்டு தனது வேலையுண்டு என்று இருக்கக் கூடிய ஒரே ஒருவர் என்றால், அது நம்ம லோஸ்லியா தான். இதற்காகவே ரசிகர்கள் லோஸ்லியா ஆர்மி உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர். தினமும் நடக்கும் நிகழ்ச்சியில் இருந்து லோஸ்லியா தொடர்பான காட்சிகள் மட்டும் புகைப்படங்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.



மைனா கதை சொல்லி அனைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இந்த நிலையில், எந்தவொரு நடிகருக்கும் இல்லாத வகையில், லோஸ்லியாவிற்கு என்று அவரது ரசிகர்கள் கட்சிக் கொடி உருவாக்கியுள்ளனர் என்று சொன்னால் மிகையாகாது. ஆம், மைனாம்ம பாதுகாப்புக் கழகம் என்ற ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டனர் அவரது ரசிகர்கள். அதோடு நிற்காமல், கருப்பு மற்றும் பிங்க் கலரில் கொடியையும் அந்தக் கொடியில், லோஸ்லியாவின் முகம் இடம்பெற்றிருக்கும் வகையில், கொடியை வடிவமைத்துள்ளனர். இது தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாப் டாக்.

தொடர்ந்து பேருந்தில் லோஸ்லியாவின் புகைப்படத்தையும் இடம்பெறச் செய்துள்ளனர். இது, எடிட்டிங் என்று கூறப்படுகிறது. ஆனால், விஜய், அஜித், சூர்யா என்று மாஸ் காட்டும் ரசிகர்களுக்குக் கூட இப்படியொரு அரசியல் கட்சிக் கொடியை யாரும் உருவாக்கியிருக்கமாட்டார்கள் என்று கூறும் அளவிற்கு லோஸ்லியா ஆர்மியினர் செய்து வருகின்றனர். இந்தப் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அடுத்த செய்தி