ஆப்நகரம்

Tamil Bigg Boss 3: பிக் பாஸ் வீட்டிற்கு எல்லாம் போகணுமா? யோசிக்கும் சினேகன்!

அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோரைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக கவின் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 11 Sep 2019, 4:08 pm
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது உணர்ச்சிப்பூர்வமான டாஸ்க்குகளுடன் சென்று கொண்டிருக்கிறது. கவின், லோஸ்லியா, வனிதா, ஷெரின், சாண்டி, தர்ஷன், முகென் ஆகிய 7 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் இருக்கின்றனர். இதில், லோஸ்லியா, முகென் ஆகியோரைத் தவிர தர்ஷன், வனிதா, சாண்டி, கவின், ஷெரின் ஆகிய 5 போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
Samayam Tamil Snehan Bigg Boss


இந்த நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகியோர் வெளியில் சென்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து முகெனின் அம்மா, சகோதரி இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்துள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் ரகசிய அறையில் இருந்த சேரன் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருவது போன்று புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதே போன்று, லோஸ்லியாவின் அப்பா மரியனேசன் பிக் பாஸ் வீட்டிற்கு வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.

கவின் காதலுக்கு ஆப்பு வைக்கும் சேரன்: லோஸ்லியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்!

Episode 78 Highlights: முக்கியமான 3 கேள்விகளை கேட்ட சேரனால் தவறை உணர்ந்த வனிதா!

Episode 78 Highlights: முக்கியமான 3 கேள்விகளை கேட்ட சேரனால் தவறை உணர்ந்த வனிதா!


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 2ஆவது இடம் பிடித்த கவிஞர் சினேகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அழைப்பு வந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுடன் உள்ளே சென்று இருக்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றேன். கருத்துக்கள் வரவேற்கத்தக்கது என்று பதிவிட்டுள்ளார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து விரைவில் தெரியவரும். சினேகனுக்குப் பதிலாக முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ், 2ஆவது சீசனில் வெற்றி பெற்ற ரித்விகா ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்தால், பிக் பாஸ் 3 போட்டியாளர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி