ஆப்நகரம்

சனம் vs சுரேஷ் சக்ரவர்த்தி! யார் மீது தவறு? - நெட்டிசன் ரியாக்ஷன்

சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டி பிரச்சனை எல்லை மீறி சென்றுள்ள நிலையில் அது பற்றி ரசிகர்கள் என்னவெல்லாம் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் என பாருங்கள்.

Samayam Tamil 21 Oct 2020, 4:09 pm
சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே கடந்த சில தினங்களாகவே அதிக அளவு சண்டை நடந்து வரும் நிலையில் தற்போது அது மிகப்பெரிய சண்டையாக மாறி இருக்கிறது. சற்றுமுன் வெளிவந்த ப்ரொமோ வீடியோவில் சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Samayam Tamil Sanam Shetty and Suresh Chakravarthy


அவர்கள் இடையே அப்படி என்ன தான் பிரச்சனை என விரிவாக பார்க்கலாம்..

முதல் வாரத்தில் சனம் ஷெட்டியும் சுரேஷும் குக்கிங் டீமில் இருந்தனர். அப்போதே அவர்கள் நடுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் சுரேஷ் குக்கிங் டீமில் இருந்து விலகிவிட்டார். அப்போது இருந்தே அவர்கள் நடுவில் எதாவது உரசல் இருந்துகொண்டே தான் இருக்கிறது.

சுரேஷ் உடலில் உள்ள பிரச்சனை காரணமாக குனிந்து வேலை செய்ய முடியாமல் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு அவர் பாத்ரூம் sink-ல் துணி துவைக்க முயன்றபோது சனம் அதை தடுத்தார். பாத்ரூம் கழுவ கீழே குனிய முடியும் என சொல்கிறார், ஆனால் துணி துவைக்க முடியாதா சனம் நக்கலாக கேட்டு இருந்தார். அதனால் கோபமான சுரேஷ் சனம் ஷெட்டியிடம் கோபமாக பேசினார். 'என் சொந்த விஷயத்தில் இனி தலையிடாதே' எச்சரித்தார். நேற்றைய டாஸ்கில் சனம் ஷெட்டியை பாம்பு என குறிப்பிட்டு தாக்கி பேசி இருந்தார் அவர்.

அதன் பின் இன்று நடந்த டாஸ்கில் சுரேஷ் சக்ரவர்த்தி கோலால் சனம் தலையில் அடித்ததால் அவர் சினம் கொண்டார். உடனே வாடா.. போடா என வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நெட்டிசன்கள் அது பற்றி விவாதம் நடத்தி வருகின்றனர். இருவர் செய்ததும் தவறு தான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

'ஒருவேளை சுரேஷ் கதவை மறைந்து இருந்த அந்த துணியை கீழே தள்ள தான் அந்த செங்கோலை பயன்படுத்தி இருப்பார், அது தெரியாமல் சனம் தலையில் பட்டிருக்கலாம்' என சிலர் கூறி வருகிறார்கள்.


அப்பா வயதில் இருக்கும் ஒருவரை இப்படியா தரக்குறைவாக பேசுவது என்று சனம் ஷெட்டியை ஒருவர் திட்டி இருக்கிறார்.


ஒருவேளை தெரியாமல் அடித்து இருந்தாலும் அதன் பின் நக்கலாக சிரித்துவிட்டு செல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.


சுரேஷ் வேண்டுமென்றே சனம் ஷெட்டியை அடித்து இருந்தால், அவரை வெளியேற்றிவிடுவார்களா என்கிற கேள்வியையும் சிலர் எழுப்பி இருக்கிறார்கள்.




சனம் ஷெட்டி ஸ்பிரே அடித்தது தவறு என்றும் சிலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.


சனம் ஷெட்டி சிம்பதி பெற இப்படி இதை பெரிதாக்குகிறார் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.


'ரெண்டு பேரும் ஒன்னுக்கு ஒன்னு சளச்சவங்க இல்ல' என ஒரு ரசிகர் தெரிவித்து உள்ளார்.

அடுத்த செய்தி