ஆப்நகரம்

Bigg Boss 5: இரண்டு போட்டியாளர்களுக்கு தண்டனை: ஆனால் பலிகடா ஆன இசைவாணி

பிக் பாஸ் 5ல் இன்று டாஸ்கில் சரியாக perform செய்யாத பாவனி மற்றும் மதுமிதாவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 28 Oct 2021, 5:39 am
கடந்த வாரம் வழங்கப்பட்ட பஞ்சதந்திரம் டாஸ்கில் போட்டியாளர்களுக்கு அதிகம் பவர்ஃபுல் ஆன காயின்கள் கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த வாரம் நெருப்பு வாரம் என சொல்லி வீட்டில் நெருப்பு காயின் வைத்திருக்கும் இசைவாணிக்கு கிட்சன் ஏரியாவை கண்ட்ரோல் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது.
Samayam Tamil Isaivani


மேலும் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்கில் இசைவாணி தான் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த டாஸ்கில் சரியாக perform செய்யாத இரண்டு பேரை இரண்டு அணிகளும் தேர்வு செய்து சொல்ல வேண்டும் என கூறப்பட்டது. பாவனி சரியாக விளையாடவில்லை என சொல்லி நிரூப் கூறினார், அதே போல கிராமத்தினர் டீமில் மதுமிதா சரியாக பperform செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுகிறது.

அதனால் அவர்கள் இருவரும் இரவு கண்விழித்து தீயை எரியவிட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அவர்கள் சரியாக டாஸ்க் செய்கிறார்களா என்பதை இசைவாணி உடன் இருந்து கவனிப்பார் ஏன் பிக் பாஸ் அறிவிக்கிறார். அதை கேட்டு அனைத்து போட்டியாளர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

இசைவாணி இப்படி பலிகடா ஆகிவிட்டாரே என்று தான் அனைவரும் சிரித்திருக்கிறார்கள்.

அடுத்த செய்தி