ஆப்நகரம்

பரபரப்பு... பிக்பாஸ் போட்டியாளரை கைது செய்து, ஜெயிலில் அடைத்த போலீசார் !

பிக்பாஸ் போட்டியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஜெயிலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 22 Jun 2019, 3:48 pm
பிக்பாஸ் போட்டியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ஜெயிலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Bigg Boss Marathi


இந்தியாவின் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றம் இந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை அந்தந்த மொழியில் இருக்கும் சினிமா பிரபங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

தமிழில் பிபாஸ் 3வது சீசன் நாளை ஜூன் 23ம் தேதி தொடங்க உள்ளது. இதனை நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

ஆரம்பமானது பிக்பாஸ் - கெத்தாக புகைப்படத்தை வெளியிட்ட கமல்!

பிக்பாஸ் போட்டியாளர் கைது:
இந்நிலையில் பிக்பாஸ் மராத்தி 2 நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள போட்டியாளர் அபிஜித் பிச்சுகலேவை போலீசார் கைது செய்துள்ளனர்.

மிருணாளினி, விஜே ரம்யா, சாந்தினி, கஸ்தூரி... மேலும் பல அபிமானங்கள்..? எங்கிருக்கிறார்கள் தெரியுமா...?


இவர் பலருக்கு கொடுத்த செக் பணமில்லாததால் திரும்பி வந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு அரசியல்வாதி ஒருவர் அபிஜித் பிச்சுகலே மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து பிணையில் விடுவிக்க முடியாத வகையில் வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.


அதுவும் போலீசார் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அபிஜித்தை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி