ஆப்நகரம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் நிரூப் வெளியிட்ட முதல் வீடியோ: ரசிகர்கள் வாழ்த்து!

பிக்பாஸ் பைனாலிஸ்ட்டில் முதல் ஆளாக வெளியேறிய நிரூப் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 17 Jan 2022, 5:40 pm
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. நேற்றைய தினம் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்றது.
Samayam Tamil Niroop Nandakumar
Niroop Nandakumar


பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் மிகவும் உயர்ந்த நபராக இருந்தவர் நிரூப். நடிகை யாஷிகாவின் முன்னாள் காதலர் என்ற அடையாளதோடு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார். தனது நீளமான முடியால் பேமஸ் ஆனான நிரூப், கடந்த சில தினங்களுக்கு முன்பாக முடி வெட்டி ஷார்ட் ஹேரில் கொடுத்த லுக் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவிற்கு கிடைத்த மொத்த பணம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் முதல் நபராக நிரூப் நந்தகுமார் வெளியேறினார். இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹாய் 105 நாட்களுக்கு பிறகு வெளியே வந்திருக்கேன் உலகமே நிறைய மாறியிருக்கு என்ன பண்ணப்போறன் தெரியலை. உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிக்பாஸ் ஃபினாலேவுக்கான டிக்கெட்டை வென்று முதல் நபராக அமீர் முதல் பைனாலிஸ்ட் ஆக நுழைந்ததும் அவரை இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக நிரூப் தேர்வானார். அதனை தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக ராஜுவும், பிரியங்கா இரண்டாம் இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி