ஆப்நகரம்

Bigg Boss: டபுள் எவிக்கெஷனில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஒருமனதாக தேர்வு செய்த ஹவுஸ்மேட்ஸ்

நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் வரும் வார நாட்களில் டபுள் எவிக்கெஷன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமல் அறிவித்த நிலையில், இன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 18 Sep 2018, 12:42 am
நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் வரும் வார நாட்களில் டபுள் எவிக்கெஷன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமல் அறிவித்த நிலையில், இன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil big-boss-cover-pic
டபுள் எவிக்கெஷனுக்கு தள்ளப்பட்ட ஐஸ்வர்யா, விஜயலட்சுமி


கடந்த வாரம் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர் மும்தாஜ் வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து இனி வரும் நாட்களின் இரண்டு பேர் ஒன்றாக எலிமினேட் செய்யப்படுவார்கள் என கமல் அறிவித்தார்.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. அதன்படி இன்று இதுவரை இல்லாத கடினமான டாஸ்க் யஷிகாவுக்கு வழங்கப்பட்டது. அவர் மிகுந்த பொறுமையுடன் அதை விளையாடி முடித்தார்.

டாஸ்க் நேரம் முடிவடைந்ததாக பிக்பாஸ் அறிவித்த உடன், மற்ற போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து டபுள் எவிக்‌ஷென் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஹவுஸ்மேட்ஸுக்கு பிக்பாஸ் ஆணை பிறப்பித்தார்.

அதன்படி, இன்றைய போட்டியில் பெரும்பாலான போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை ஒருமனதாக தேர்வு செய்தனர். அதை தொடர்ந்து ரித்விகா, யஷிகா, ஜனனி உள்ளிட்ட சிலர் விஜயலட்சுமியை தேர்வு செய்தனர்.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறவிருப்பதாகவும், நிகழ்ச்சியின் பினலேவில் ஜனனி உள்பட 4 பேர் இடம்பெறுவார்கள் என்றும் கமல் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி