ஆப்நகரம்

Episode 21: சிறை சென்றார் பொன்னம்பலம்... வெளியேறினார் ஆனந்த் வைத்தியநாதன்

இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலத்தை சிறையில் அடைத்து விட்டு பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியேறினார் ’வாய்ஸ் எக்ஸ்பர்ட்’ ஆனந்த் வைத்தியநாதன்.

Samayam Tamil 8 Jul 2018, 10:57 pm
இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலத்தை சிறையில் அடைத்து விட்டு பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியேறினார் ’வாய்ஸ் எக்ஸ்பர்ட்’ ஆனந்த் வைத்தியநாதன்.
Samayam Tamil bigboss-cover-pic
ஆனந்த் வைத்தியநாதன் வெளியே.... பொன்னம்பலம் உள்ளே..!!


அகம் டிவி வழியே இன்று போட்டியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான சில விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

தொடர்ந்து இன்றைய நிகழ்ச்சியில், பிக்பாஸ் 2 வீட்டிலிருந்து வெளியேறும் பிரபலம் என்பதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, பிரபல ’வாய்ஸ் எக்ஸ்பர்ட்’ ஆனந்த் வைத்தியநாதன் எலிமினேட் செய்யப்பட்டார்.

வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, கமல்ஹாசன் அவருக்கு ஒரு ’சக்தி’யை வழங்கினார். அதன்மூலம் போட்டியாளர் ஒருவரை குறிப்பிட்ட காரணங்களுக்காக பிக்பாஸ் வீட்டு சிறையில் அனுப்பலாம் என்று அவருக்கு சொல்லப்பட்டது.

அதன்படி, போட்டியாளர் சிலரின் சுதந்திரத்தில் தலையீடு செய்ததாக கூறி, பொன்னம்பலத்தை சிறையில் அடைத்தார் ஆனந்த் வைத்தியநாதன். இது பாலாஜி, நித்யா, செண்டராயன் உள்ளிட்டோர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதே சமயத்தில் யஷிகா, ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்டோர் பொன்னம்பலத்தை சிறையில் அடைக்கும் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்து விசலடித்து ஆராவாரம் செய்தனர்.

தொடர்ந்து பிக்பாஸ் 2 அரங்கிற்கு வந்த அனந்த் வைத்தியநாதன், போட்டியாளர்கள் அனைவருக்கு அவரவர் சிறப்புகளை கூறும் வகையில் பெயர் வழங்கினார். பிறகு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பிறகு அகம் டிவி வழியே போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பொன்னம்பலத்தை சிறையில் அடைக்கும் ஆனந்த் வைத்தியநாதனின் முடிவில் தனக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக கூறினார்.

ஆணுக்கு போட்டியாக இல்லாமல், ஆணை விட சிறப்பாக இருப்பதில் தான் பெண்களுக்கு சிறப்பு உள்ளதாக பேசிய கமல்ஹாசன், இன்னும் பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி