ஆப்நகரம்

Episode 95: முதல் இடத்தில் யஷிகா... அதிருப்தியில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், போட்டியாளர்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Samayam Tamil 19 Sep 2018, 11:44 pm
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், போட்டியாளர்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil biggboss-episode-95-cover-pic
வெற்றிப்படிக்கட்டு ஏறும் யஷிகா... போட்டியாளர்கள் கலக்கம்


இன்று நிகழ்ச்சி தொடங்கிய உடன் ’கட்டிக்கோ ஒட்டிக்கோ’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில்
பாலாஜி, ஜனனி, விஜயலட்சுமி அதிக புள்ளிகள் பெற்றனர்.

அதை தொடர்ந்து போட்டியாளர்கள் 1 முதல் 6 தகுதிகள் கொண்ட வெற்றிப்படிக்கட்டில் நிற்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் முதல் படிக்கட்டில் நிற்க போட்டியாளர்கள் முண்டியத்தனர்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் அனைத்து எபிசோடுகளையும் பார்க்க

குறிப்பாக ஜனனி, 1 முதல் 3 இடங்களுக்குள் தான் நிற்பேன் என்று கூற, பாலாஜி கடுப்பாகிவிட்டார். ஐஸ்வர்யா தத்தாவும் முதல் இடத்தை பிடிக்க போராடினார். ஆனால் அவராலும் முடியவில்லை.

இதனால் எரிச்சலடைந்த அவர், 6வது படிக்கட்டில் அமர்ந்து கொண்டார். பிறகு டாஸ்கை விட்டு வெளியேறி குளியலறை சென்ற ஜனனியை ரித்விகா சமாதானம் செய்து டாஸ்க் செய்ய வைத்தார்.

அதன்படி முதலிடத்தை பேசி யஷிகா பிடித்துக்கொண்டார். 2வது இடத்தை ரித்விகாவும், 3வது இடத்தில் ஜனனி, 4வது இடத்தில் விஜயலட்சுமி, 5 வது இடத்தில் பாலாஜி அகியோர் தேர்வு செய்து நின்றனர்.

இருந்தாலும் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்ரவை தூண்டிவிடும் முயற்சியில் இருந்து பிக்பாஸ் பின்வாங்குவார் என தெரியவில்லை. இன்னும் பல்வேறு திருப்பங்கள் நிகழக்கூடிய வகையில் பிக்பாஸ் 2-வின் நிகழ்ச்சிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி