ஆப்நகரம்

இப்படியொரு சைக்கோ கணவரா மீரா மிதுனுக்கு; பிக் பாஸ் வீட்டில் மறைக்கப்பட்ட சோகக் கதை!

நடிகை மீரா மிதுன் தனது கல்யாண வாழ்க்கை குறித்து வெளியிட்ட தகவல் பிக் பாஸ் போட்டியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

Samayam Tamil 1 Jul 2019, 2:44 pm
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil Meera-Mithun-1


முதல் வாரத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த சோகக் கதைகளை பகிர்ந்து கொண்டனர். இது காண்போரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.

அந்த வரிசையில் நடிகையும், மாடலுமான மீரா மிதுனும் தனது வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார். அதில், எனக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் எனது கணவர் ஒரு சைக்கோ.

Episode 7 Updates: ஒட்டுமொத்தமாக மதுமிதா பாய்ந்த போட்டியாளர்கள்- புதிய தலைவரை அறிவித்த கமல்ஹாசன்!

மிக மோசமாக நடந்து கொள்வார். பின்னர் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டார். இதனால் என் அப்பா மிகவும் வேதனை அடைந்தார். எனக்கு வேறு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் நான் என் கணவருக்காக காத்திருப்பேன் என்று கூறினேன். சில நாட்களுக்கு பிறகு, எனது கணவரை சந்தித்த போது, என்னை அடித்து காயப்படுத்தி விட்டார். அதன்பிறகு அவரை பற்றி நினைக்க வில்லை என்று கூறினார்.

இந்தக் கதையை கேட்ட வனிதா, தனது முந்தைய வாக்குவாதங்களுக்காக மீராவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனால் இந்தக் கதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பொண்ணுனா இப்படித் தான்; விளையாட்டு விபரீதமாகி சூடுபறக்கும் பிக் பாஸ் வீடு!

மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றுள்ளார். அழகிப் போட்டி நடத்துவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவரது மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது. பின்னர் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இத்தகைய சர்ச்சைகளுக்கு நடுவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி