ஆப்நகரம்

Bigg Boss Tamil 6: மகேஸ்வரி பற்றி அசீம் சொன்ன விஷயம்: விளாசும் நெட்டிசன்கள்.!

பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பின் ரசிகர்களோடு லைவ்வில் உரையாடிய அசீம், மகேஸ்வரி பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 31 Jan 2023, 8:43 am
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் அசீம் வெற்றி பெற்றார். விக்ரமன் ரன்னரானார். இந்த சீசனின் ரிசல்ட் வெளியாகி ஒரு வாரம் கடந்திருந்தாலும், இதுக்குறித்த பேச்சுக்களே இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 வின்னர் அசீம், விஜே மகேஸ்வரி குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Azeem - Maheshwari
Azeem - Maheshwari


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி, ஜிபி முத்து செரீனா, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி, ரச்சிதா, எகேடி, அசீம், விக்ரமன், கதிரவன், மைனா நந்தினி, ஷிவின் மற்றும் அமுதவாணன் ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதில் விக்ரமன், ஷிவின், அசீம் மூவரும் இறுதிவரை முன்னேறினர். அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றார். இவர் டைட்டில் வென்றது குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது. இதுவரை நடந்து முடித்த சீசன்களில் டைட்டில் வின் பண்ணியவர்களை விட அதிகமாக அசீம் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதற்கு பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்துக்கொண்ட விதம் காரணமாக கூறப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம் இரண்டு நாட்கள் கழித்துதான் முதல் வீடியோ வெளியிட்டார். மேலும், தன்னுடைய வெற்றி பணத்தில் பாதியை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி படிப்பு செலவுக்கு உதவுவதாக கூறினார். இந்நிலையில் முதல் முறையாக விஜய் டிவி அதிகாரப்பூர்வமான பக்கத்தில் லைவில் ரசிகர்களோடு உரையாடினார் அசீம்.

Baakiyalakshmi Serial: காலில் விழுந்து கதறிய ஈஸ்வரி: எழில் எடுத்த அதிரடி முடிவு..!

அப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்களை மிருகங்களோடு ஒப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அதில் பாம்பு என்று கேட்கும் போது அது மகேஸ்வரி தான் என்று அசீம் கூறினார். பாம்பு எப்போதும் உஸ்.... உஸ் என்று சீறி கொண்டே இருக்கும். அதே போலத்தான் மகேஸ்வரியும் எப்போதும் சீறி கொண்டே இருப்பார். பாம்புக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரியாது.

அது போல மகேஸ்வரிக்கும் தெரியாது. அது எதிரில் வருபவர்களை கொத்துவதற்கு பார்ப்பது போல தான் மகேஸ்வரியும் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. அசீம் டைட்டில் வென்றதை மகேஸ்வரி விமர்சித்திருந்தார். இதன் காரணமாகவே அசீம் இவ்வாறு கூறியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Vijay Tv: இறுதியாய் தனது போராட்டத்தில் ஜெயித்த பாரதி: கண்ணம்மா போட்ட கண்டிஷன்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி