ஆப்நகரம்

Bigg Boss Tamil 6: வெளியே போக நேரம் வந்துருச்சு... பிக்பாஸ் போட்டியாளரை விளாசும் நெட்டிசன்ஸ்!

Bigg Boss Tamil 6: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி வெளியே போக வேண்டிய நேரம் வந்து விட்டது என கூறி வருகின்றனர்.

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 29 Nov 2022, 2:18 pm
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி வெளியே போக வேண்டிய நேரம் வந்துருச்சு என கூறி வருகின்றனர்.
Samayam Tamil bigg boss tamil 6 netizens slams janani in biggboss house
Bigg Boss Tamil 6: வெளியே போக நேரம் வந்துருச்சு... பிக்பாஸ் போட்டியாளரை விளாசும் நெட்டிசன்ஸ்!


பிபியை எகிற வைப்பார்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே நடக்கும் வளத்தை மீட்கும் போராட்டம் வீக்ளி டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வீக்ளி டாஸ்க் என்றாலே பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறிவிடும். போட்டியாளர்கள் அடித்துக்கொள்ளாத குறையாக வாய்த்தகராறில் ஈடுபட்டு பார்வையாளர்களின் பிபியை எகிற வைப்பார்கள்.

Warrant for Ramkumar: காசோலை மோசடி வழக்கு... சிவாஜி கணேசன் மகனுக்கு பிடிவாரண்ட்!

சண்டை போடுவது டாஸ்க் அல்ல

கமல்ஹாசன் சண்டை போடுவது டாஸ்க் அல்ல, கொடுக்கும் டாஸ்க்குகளை சுவாரசியமாக கொண்டு செல்லுங்கள் என பலமுறை கூறிவிட்டார். ஆனால் ஹவுஸ்மேட்ஸ் கேட்டதாய் தெரியவில்லை. இந்நிலையில் இந்த வார டாஸ்க்கிலும் சண்டை மூண்டுள்ளது இன்று வெளியாகியுள்ள புரமோக்களில் தெரியவந்துள்ளது. முதல் புரமோவில் அம்மாவை மோசமாக பேசி விட்டதாக தனலெட்சுமியிடம் சண்டை போட்டார் ஷிவின்.

The Kashmir Files: வெட்கக்கேடு... சித்தி விநாயகர் புத்தி கொடுக்கட்டும்.. இஸ்ரேல் இயக்குநரை விளாசிய பிரபல நடிகர்!

லூசு மாதிரி பேசாத

ஆனால் தனலெட்சுமி சிரித்தப்படியே நான் அப்படி சொல்லவில்லை என கூலாக பதில் கூறினார். இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவில் அசீமூக்கும் ஜனனிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. லூசு மாதிரி பேசாதே என்று வாயை விட்டார் ஜனனி. இதனால் கடுப்பான அசீம் லூசு என்றெல்லாம் பேசக்கூடாது என்றார். உடனே டாப்பிக்கை மாற்றிய ஜனனி, கையை நீட்டி பேசாதே, நீ போ என்று என்னை பேச நீ யார் என கத்தி பிக்பாஸ் வீட்டை ரணகளம் ஆக்குகிறார்.

வெளியே போக நேரம் வந்துருச்சு

இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது என கூறி வருகின்றனர். மேலும் ஜனனி பிக்பாஸ் வீட்டில் செய்யும் தவறுகளையும் பட்டியலிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். கடந்த வாரம் நடைபெற்ற கோர்ட் டாஸ்க்கில் தனது தமிழை, விக்ரமன் இழிவாக பேசினார் என பொய் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விக்ரமன் அப்படி சொல்லவில்லை என்பது நிரூபணமானது.

Meera Second Marriage: இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை மீனா? தீயாய் பரவும் தகவல்!

கேவலமா இருக்கு

மேலும் மகேஸ்வரியிடம் பெண்கள் சிகரெட் பிடிப்பாங்களா? கேவலமா இருக்கு என்றார் ஜனனி. அதோடு ஆயிஷா தீபாவளியன்று மயங்கியதை கூட டிராமா என்றார் என அவர் பேசியதையெல்லாம் கூறி தன்வினை தன்னைச் சுடும் என குறிப்பிட்டு வருகின்றனர். ஜனனி பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவைரையும் பெயரை சொல்லித்தான் அழைக்கிறார், யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை என்றும் விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நயன்தாரா புருஷன் கொடுத்து வச்சவர்தான்!

தொலைக்காட்சி தொகுப்பாளர்

இந்நிலையில் காரணமே இல்லாமல் அசீம்மிடம் கத்தும் ஜனனியை இந்த வாரம் நிச்சயமாக வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்த ஜனனி, அங்குள்ள தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் ஜனனி. பிக்பாஸ் வீட்டில் இதுவரை தனது திறமையை வெளிக்காட்டாத ஜனனி, சம்பந்தம் இல்லாமல் அடிக்கடி ஹவுஸ்மேட்டுகளுடன் சண்டை போட்டு வருகிறார்.

காசுக்காக 'அந்த' வேலையை செய்த நயன்தாரா!

எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி