பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் நடிகை கஸ்தூரி. இவருடைய வருகை பல போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் அடுத்து நடந்தது பேரதிர்ச்சியானது.
முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட நடிகை வனிதா, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். இது போட்டியாளர்கள் மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. கஸ்தூரி வருகையால், அவருக்கும் வனிதாவுக்கும் சண்டை சச்சரவு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு, வனிதாவை பார்த்தவுடன் சரணடைந்துவிட்டார் கஸ்தூரி. வனிதாவாகவே வந்து பிரச்னையை இழுத்தாலும், கஸ்தூரி அவரிடம் சமாதானம் கடைப்பிடிக்கவே முனைந்தார்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக் குழுவினரின் திட்டம் தூள் தூளானது. தவிர, பல்வேறு போட்டியாளர்களிடம் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார் கஸ்தூரி. முடிவில் அவருக்கு எலிமினேஷனுக்கான பரிந்துரைகள் குவிந்தன.
அவருடன் சேர்த்து சாண்டி, தர்ஷன் மற்றும் சேரன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர். மற்ற மூவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே இருப்பதால் அவர்களுக்கு வாக்குகள் குவிந்தன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரியளவில் தாக்கத்தை உருவாக்க முடியவில்லை மற்றும் போட்டியாளர்களிடம் இருந்து வந்த மோதல் போக்கு போன்ற காரணங்களில் கஸ்தூரிக்கு குறைந்தளவிலே வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்காக நேற்று நடந்த படப்பிடிப்பில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக, அவருக்கு சீக்ரெட் ரூமுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை மறுத்துவிட்ட கஸ்தூரி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாராம். எனினும், அவர் சீக்ரெட்டு ரூமுக்கு தான் அனுப்பப்பட்டுள்ளார் என ஒரு தரப்பினரும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக எலிமினேட் செய்யப்பட்ட நடிகை வனிதா, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். இது போட்டியாளர்கள் மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. கஸ்தூரி வருகையால், அவருக்கும் வனிதாவுக்கும் சண்டை சச்சரவு உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ வேறு, வனிதாவை பார்த்தவுடன் சரணடைந்துவிட்டார் கஸ்தூரி. வனிதாவாகவே வந்து பிரச்னையை இழுத்தாலும், கஸ்தூரி அவரிடம் சமாதானம் கடைப்பிடிக்கவே முனைந்தார்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக் குழுவினரின் திட்டம் தூள் தூளானது. தவிர, பல்வேறு போட்டியாளர்களிடம் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார் கஸ்தூரி. முடிவில் அவருக்கு எலிமினேஷனுக்கான பரிந்துரைகள் குவிந்தன.
அவருடன் சேர்த்து சாண்டி, தர்ஷன் மற்றும் சேரன் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டனர். மற்ற மூவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே இருப்பதால் அவர்களுக்கு வாக்குகள் குவிந்தன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரியளவில் தாக்கத்தை உருவாக்க முடியவில்லை மற்றும் போட்டியாளர்களிடம் இருந்து வந்த மோதல் போக்கு போன்ற காரணங்களில் கஸ்தூரிக்கு குறைந்தளவிலே வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்காக நேற்று நடந்த படப்பிடிப்பில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக, அவருக்கு சீக்ரெட் ரூமுக்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை மறுத்துவிட்ட கஸ்தூரி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாராம். எனினும், அவர் சீக்ரெட்டு ரூமுக்கு தான் அனுப்பப்பட்டுள்ளார் என ஒரு தரப்பினரும் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.