ஆப்நகரம்

Bigg Boss 4 Nomination: இரண்டு பேரை மட்டும் குறிவைத்த போட்டியாளர்கள்! வெளியேறப்போவது யார்? புதிய ப்ரொமோ

இந்த வாரம் வெளியேற்றப்படுவதற்கான போட்டியாளரை தேர்வு செய்ய நாமினேஷன் நடைபெற்று உள்ளது. அதில் சனம் ஷெட்டி மற்றும் ஷிவானியை தான் அதிகம் பேர் தேர்வு செய்திருக்கிறார்கள்.

Samayam Tamil 12 Oct 2020, 9:32 am
பிக் பாஸ் நான்காவது சீசன் துவங்கி வெற்றிகரமாக ஒரு வாரம் நிறைவு பெற்றிருக்கிறது. போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே வாக்குவாதம், சண்டை என அனைத்தையும் உருவாக்கி நிகழ்ச்சியை மிக பரபரப்பாக ஆக்கிவிட்டார்கள். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்பதால் நாமினேஷன் நடைபெறவில்லை. இந்நிலையில் இரண்டாம் வாரத்தில் நிச்சயம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படவில்லை என்பதால் இன்று திங்கட்கிழமை நாமினேஷன் நடைபெற்றது.
Samayam Tamil Bigg Boss 4 Tamil Nomination


சென்ற வாரம் கடந்து வந்த பாதை டாஸ்கின் முடிவில் மொத்தம் 8 போட்டியாளர்கள் பெயர் மட்டும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ரேகா கேப்ரியலா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, ஆஜித், ரம்யா, ஷிவானி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் தான் அந்த எட்டு பேர்.

ஆனால் நேற்று சுரேஷ் சக்ரவர்த்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தால் அவரை யாரும் இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது. அதனால் மீதமிருக்கும் 7 நபர்களில் யாராவது இருவரை மட்டுமே போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்ய முடியும்.

தற்போது எட்டாம் நாள் புது ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் கண்பெஷன் ரூமுக்கு சென்று அவர்கள் விரும்பும் இரண்டு பேரை நாமினேட் செய்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சனம் ஷெட்டியை தான் நாமினேட் செய்தார்கள். அதற்குக் காரணம் அவர் போலியாக நடிப்பது போல இருக்கிறது என ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் பலரும் கூறி வருவது தான்.

மேலும் ஷிவானி நாராயணனை பல போட்டியாளர்கள் நாமினேட் செய்தார்கள். யாருடனும் அதிகம் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை மீண்டும் அவர் மீது வைத்திருக்கிறார்கள்.


ஷிவானி மற்றும் சனம் ஷெட்டி இருவரும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கப் போவது உறுதி என்பதால் வேறு யாரெல்லாம் அந்த லிஸ்டில் வரப்போகிறார்கள் என்பது இன்று இரவு தெரிந்து விடும். அது வரை காத்திருங்கள்.

அடுத்த செய்தி