ஆப்நகரம்

இன்று பிக்பாஸ் வீட்டில் திறக்கப்படுமா ரகசிய அறை..?

பிக்பாஸ் சீசன் 3-க்கான ரகசிய அறையை கமல் நேற்று அறிமுகம் செய்துவைத்துள்ள நிலையில், இன்று அது திறக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Samayam Tamil 28 Jul 2019, 4:34 pm
கடந்த பிக்பாஸ் சீசன் 2-வின் போது ரகசிய அறை என்கிற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு போட்டியாளர் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் முழுவதும் தனி அறையில் வைக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் கவனிக்க வேண்டும்.
Samayam Tamil இன்றே ரகசிய அறைக்குள் அனுப்பி வைக்கப்படும் அந்த போட்டியாளர்
இன்றே ரகசிய அறைக்குள் அனுப்பி வைக்கப்படும் அந்த போட்டியாளர்


பிறகு வார இறுதிநாளில் கமல் முன்னிலையில் வந்து, நிகழ்ச்சியில் அந்த போட்டியாளர் கவனித்த அனைத்த விஷயங்களையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். இதுதான் ரகசிய அறைக்கான விதிமுறைகள்.

இந்த சீசனுக்கான ரகசிய அறையை நேற்று கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். விரைவில் ஒரு போட்டியாளர் அங்கு அனுப்பப்படுவார் என்றும் அவர் கூறினார். ஆனால் எப்போது என்று கமல் கூறவில்லை. இதனால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்நிலையில் மீரா மிதூன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுகிறது. ஆனால் அவர் தான் ரகசிய அறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் எலிமினேட் ஆனது நிகழ்ச்சி தயாரிப்புக் குழு வட்டாரத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் சாக்‌ஷி, லோஸ்லியா, கவின் ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டு ரகசிய அறைக்குள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ரகசிய அறைக்குள் எந்த போட்டியாளர் செல்ல வேண்டும் என கமல்ஹாசன் பார்வையாளர்களிடம் கேட்பது போன்ற ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

அடுத்த செய்தி