ஆப்நகரம்

காணாமல் போன சரவணனுக்காக கண்ணீர் சிந்தும் கவின், சாண்டி..!

யாருக்கும் தெரியாமல் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து சரவணன் வெளியேற்றப்பட்ட நிலையில், அதை போட்டியாளர்களிடம் அறிவிக்கப்படும் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Samayam Tamil 6 Aug 2019, 4:03 pm
சேரன் தன்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டார் என அபாண்டமாக பழி சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் மீரா மிதூன். அப்போது பிக்பாஸ் வீடே சேரனுக்கு ஆதரவாக இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் சேரனிடம் அவ்வப்போது கோபம் காட்டி வந்த சரவணன் கூட அவருக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார்.
Samayam Tamil வெளியேற்றப்பட்ட சரவணன்; துடித்து அழும் சாண்டி, கவின்
வெளியேற்றப்பட்ட சரவணன்; துடித்து அழும் சாண்டி, கவின்


இந்த விவகாரம் கமல் முன்பு பேச்சுவார்த்தைக்கு வந்தது. சம்பவம் நடந்த போது டாஸ்க்கின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் லேசாக மீராவை தள்ளியுள்ளார் சேரன். இந்த பிரச்னையை திசை திருப்பி தனக்கு சாதமாக மாற்ற நினைத்து சேரன் மீது மீரா அபாண்டமாக பழி சுமத்தியது தெரிய வந்தது.

மேலும் நடந்த உரையாடலில், பெண்கள் மீதான தவறான நடவடிக்கைகள் கண்டிக்கக்கூடியது தான்; ஆனால் குற்றச்சாட்டின் உண்மை நிலையையும் ஆராய வேண்டும். பேருந்துகளில் வேலைக்குச் செய்யும் பெண்களை இடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் வரும். அதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார் கமல்ஹாசன்.

இடையில் கையை உயர்த்திய சரவணன், கல்லூரி காலங்களில் தானும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டேன் என்றார். தேசிய ஊடகத்தில் தெரிவித்த இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. சரவணனின் பேச்சுக்கு கமல் கண்டனங்களை தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியிலும் இந்த விவகாரம் தொடர்பாக போட்டியாளர்கள் அவர் முன்பு அவர் மன்னிப்புக் கோரினார்.


எனினும், சரவணனின் நடவடிக்கைக்கு பல கண்டனங்கள் எழுந்து வந்தன. இதை உணர்ந்த நிகழ்ச்சி தயாரிப்புக் குழு, நேற்று அவரை தனியே கன்ஃபெஷன் ரூமுக்கு தனியாக அழைத்து, அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது. அவரும் போட்டியாளர்களிடம் எதுவும் சொல்லாமல் பின்வாசல் வழியாக வெளியேற்றப்பட்டார்.

இது நிகழ்ச்சியில் புதிய திருப்பமாக அமைந்தது. இன்று, சரவணன் வெளியேற்றப்பட்டதை மற்ற போட்டியாளர்கள் முன்பு அறிவிக்கிறார் பிக்பாஸ். இதை கேட்டதும் சேரன் உட்பட அனைத்து போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். கூடுதலாக சாண்டி மற்றும் கவின் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

இதனால் இன்று பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வாரம் சரவணனை நாமினேட் செய்த அபிராமி கூட நிகழ்ச்சியில் சோகமாக இருக்கிறார். இருந்தாலும், சரவணனுக்கு ஆதரவு தெரிவித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கூறியும் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

அடுத்த செய்தி