ஆப்நகரம்

Episode 71: வெளியேறிய மகத். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் வீடு!

அனைவரும் எதிர்பார்த்ததை போலவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மகத் வெளியேறிவிட்டார்.

Samayam Tamil 27 Aug 2018, 3:51 pm
அனைவரும் எதிர்பார்த்ததை போலவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மகத் வெளியேறிவிட்டார்.
Samayam Tamil kamal bigg boss


இதுவரையில் கமல்ஹாசன் யார் எவிக்ஷன் என்பதை ஜவ்வாக இழுத்து சுமார் அரை மணி நேரம் விளையாடி விட்டு தான் அறிவிப்பார். ஆனால், இந்த முறை மகத் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்பதை வந்த உடனேயே அறிவித்து விட்டார். அதுவும் சும்மா இல்லை. பொதுவாக வெள்ளை நிற அட்டையில் தான் வெளியேறப் போகும் நபரின் பெயர் எழுதப்பட்டிருக்கும். ஆனால், மகத்தின் பெயர் சிவப்பு அட்டையில் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் மகத் செய்த அடவாடித்தனத்தின் வெளிபாடு தான் இந்த சிவப்பு அட்டை.

மகத் வெளியேறியதும், வழக்கம் போல் அவருக்கான குறும்படம் காட்டப்பட்டது. அதில் மகத் கோபத்தில் செய்த அட்டகாசம், வன்முறை என ஓட்டு மொத்தமாக காட்டப்பட்டது. இதை பார்க்க முடியாமல் மகத்தும் தலை குணிந்தார்.

முந்தைய எபிசோட் பார்க்க...

தொடர்ந்து அகம் டிவி வழியே மற்ற கண்டஷ்டன்ட் உடன் மகத் பேசினார். அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டார். அவருக்கு டேனியல் ஆறுதல் கூறினார். ரித்விகா, ‘இந்த 70 நாட்களில் மகத் யாருன்னு நிரூபிக்காததை, வெளியே சென்று இனி வரும் காலங்களில் அதை நிரூபி. அது தான் உண்மையான மகத்தை மக்களுக்கு காட்டும்’ என்று கூறியது அரங்கில் கைத்தட்டலை எழுப்பியது.

அனைத்து எபிசோட்களையும் பார்க்க...

மகத் வெளியேறியதும் மும்தாஜ், டேனியல் உள்ளிட்டோர் சந்தோஷமாக இருந்தனர். யாஷிகா கண்ணீர் விட்டு அழுதார். ஐஸ்வர்யா கஷ்டப்பட்டு அழுதார். யாஷிகா மிஸ் யூ என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், லவ் யூ என்றும் சொல்லி விட்டார். அதற்கு மகத், ‘இன்னும் 35 நாட்கள் மட்டும் தான். அதுக்கப்புறம் மீட் பண்ணீரலாம்’ என்று கூறினார். கடைசி வரைக்கும் பாலாஜி ஒருவர் தான் மகத்தை பற்றி தெரியாமல் இருந்தார் என்றே கூற வேண்டும்.

அடுத்த செய்தி