ஆப்நகரம்

சேரனிடம் தொலைப்பேசியில் பேசிய அந்த பிரபலம் இவர் தான்..!

பிக் பாஸ் வீட்டில் தொலைப்பேசி வாயிலாக சேரனிடம் பேசும் ஒரு பிரபலம், அவரை எப்போது தன் துணை இயக்குநராகவே பார்ப்பதாக கூறும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Samayam Tamil 25 Aug 2019, 5:43 pm
பிக் பஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெறும் ’ஃப்ரூட்டீ காலர் ஆஃப் தி வீக்’ போட்டியில், ஹவுஸ்மேட்ஸுக்கு நெருக்கமானவர்கள் தொலைப்பேசி வாயிலாக இணைந்து பேசுகின்றனர்.
Samayam Tamil சேரனை கண்கலங்க வைத்த அந்த போன் கால்
சேரனை கண்கலங்க வைத்த அந்த போன் கால்


அவ்வாறு கவின், முகின் ஆகியோரிடம் அவரவர் குடும்பத்தினர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். இது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்த, இருவரும் கண் கலங்குகின்றனர்.

அதேபோல, சேரனுக்கும் ஒரு அழைப்பு வருகிறது. கமல் போலவே “அகம் டிவி வழியே அகத்திற்குள்” என்று கூறிவிட்டு அந்த பிரபலம் சேரனிடம் பேசத் தொடங்குகிறார்.

சேரனிடம் நலம் விசாரிக்கும் அந்த பிரபலம், போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் உனக்கு என்னுடைய பாராட்டுக்கள். நிகழ்ச்சியில் என்னைக் குறித்து நீ பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நல்ல குரு மற்றும் சிஷ்யன் என்று பெயர் மற்ற உனக்கு மாநில விருது, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. உன்னை எப்போதும் என்னுடைய பழைய துணை இயக்குநராக பார்க்கிறேன் என்கிறார்.


இதை கேட்டவுடன் சேரன் கண்கலங்கி விடுகிறார். அவருக்கு மற்ற போட்டியாளர்கள் ஆறுதல் தெரிவிக்கின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

தொலைப்பேசியில் சேரனிடம் பேசிய பிரபலம் யாரென்று அந்த ப்ரோமோ வீடியோவில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர் யாராக இருக்கூடும் என்று நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

புரியாத புதிர் படத்தின் மூலம் தமிழி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கே.எஸ். ரவிக்குமார். அப்போது அவருடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் சேரன்.

ரவிக்குமாரின் பல்வேறு படங்களுக்கு அவர் இணை இயக்குநராக இருந்துள்ளார். பிறகு, தனியாக படம் இயக்க ஆரம்பித்து மாநில விருது, தேசிய விருது உள்ளிட்ட வெற்றிகளை பெற்று சாதனை படைத்தார் சேரன்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் தொலைப்பேசியில் பேசிய அந்த பிரபலம் கே.எஸ். ரவிக்குமார். அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேரன் வெற்றிய அடைய வேண்டும் என தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி