ஆப்நகரம்

'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்

கவின்-லொஸ்லியா காதல் விவகாரம் குறித்து சேரன் ட்வீட் செய்து உள்ளார்.

Samayam Tamil 19 Oct 2019, 5:42 pm
பிக் பாஸ் சீசன் 3யில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின்- லொஸ்லியா. இவர்களின் காதல் கதையே ஒளிபரப்பானதால், பார்வையாளர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது.
Samayam Tamil 70187023


அது மட்டுமின்றி சமூகவலைத்தளங்களில் இவர்களின் காதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பிரீஸ் டாஸ்க் சமயத்தில் லொஸ்லியா அப்பா உள்ளே சென்று எடுத்து சொல்லியும் அவர்கள் தங்களின் காதலை தொடர்ந்து கொண்டே இருந்தனர். இது மட்டுமின்றி சேரன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே அவர்களின் காதலுக்கு அறிவுரை கூறினார். ஆனால் அதையும் அவர்கள் கேட்டபாடு இல்லை.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த கவின்-லொஸ்லியா சந்தித்தது போல் தெரியவில்லை. இதற்கு காரணம் சேரன் தான் என்று சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சேரன் ட்வீட் செய்துள்ளார்.

தாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா! மகிழ்ச்சியில் இலங்கை மக்கள்...

அதில் அவர் கூறியிருப்பதாவது, 'கவின்- லாஸ்லியா ரசிகப் பெருமக்களுக்கு, உங்களுக்குப் பிடித்தவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி, வெளிவந்த பின்னும் சரி புண்படுத்தவோ அவர்கள் சுதந்திரத்தில் தலையிடவோ நான் முயலவில்லை. நல்லெண்ண அடிப்படையில் இப்போது வேண்டாம் எனக் கூறினேன். அது உங்களுக்குத் தவறு எனில் வருத்தம் தெரிவிக்கிறேன்.


தகாத வார்த்தைகளால் பேசுவதால் பிரச்சினை தீராது. இதை வளர்த்து நான் பெரிய ஆளாக விரும்பவில்லை. நான் எவ்வளவோ பேசிப் பழக முயன்றும் என்னோடு கவின் பேச விரும்பவில்லை. அவர் புறக்கணித்தார் என்பதே உண்மை.

நீங்களும் பார்த்திருப்பீர்கள். இருந்தும் பிரச்சினை பெரிதாகாமல் இருக்க அவருக்கு எடுத்துச்சொன்னேன். கவின் - லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ, வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்கப் போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது.

முகென் பெயரை பச்சைகுத்திய வெறித்தனமான ரசிகர்!

இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரிகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சினைக்கு வரவேண்டாம். நான் வீட்டுக்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துகள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன். இதற்கு மேலும் என்னைப் பிடிக்காதவர்கள் என்னைப் பின்தொடர (follow) வேண்டாம்.. மிக்க நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி