ஆப்நகரம்

டி.ஆர்.பி.க்காக பிக் பாஸ் செய்த காரியத்தை 'எக்ஸ்போஸ்' செய்த சேரன்

நேற்றையை பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை பார்த்தவர்கள் சேரன் கூறியதை கேட்டுவிட்டு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 23 Sep 2019, 11:52 am
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இயக்குநர் சேரன் நேற்று வெளியேற்றப்பட்டார். முன்னதாக ஷெரின், லோஸ்லியா, சேரன் ஆகிய மூன்று பேரும் வெளியேற்றப்படுவது போன்று ப்ரொமோ வீடியோக்கள் வெளியானது. ஆனால் அந்த வீடியோக்களை பார்வையாளர்கள் நம்பவில்லை.
Samayam Tamil cheran


சேரன் வெளியேற்றப்படும் முன்பு ஃப்ரூட்டி காலரான பிரதீப் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, லோஸ்லியாவை மகள், மகள் என்று கூறுகிறீர்கள், அறிவுரை வழங்குகிறீர்கள். ஆனால் உங்களின் சொந்த மகள் லோஸ்லியாவை மகள் என்று சொல்லக் கூடாது என்றபோது அப்படி எல்லாம் பேசக் கூடாது என்று ஏன் அட்வைஸ் பண்ணவில்லை என்று கேட்டார்.

அதற்கு சேரனோ, என் மகளுக்கு உடனேயே அட்வைஸ் செய்தேன். ஆனால் அதை உங்களுக்கு காண்பிக்கவில்லை. இல்லப்பா, அவளும் மகள் தான். நீ லோஸ்லியாவை அக்கா மாதிரி தான் பார்க்க வேண்டும் இல்லை தங்கச்சி மாதிரி பார்க்க வேண்டும் என்று கூறி அவர்களை பேச வைத்தேன் நான். அதை காட்டாததால் தவறாக தெரிந்துள்ளது என்றார்.

அப்பா நீ லோஸ்லியாவுடன் பேசாதே என்று சேரனிடம் அவர் மகள் கூறியதை மட்டும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தினார் பிக் பாஸ். டி.ஆர்.பி.க்காக பிக் பாஸ் செய்த வேலையை சேரன் அப்பாவித்தனமாக போட்டுடைத்துவிட்டார்.

Cheran: 2ஆவது முறையாக வெளியேற்றப்பட்ட சேரன்!

பெத்த மகள் தான் லோஸ்லியாவிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியும் சேரனுக்கு அவர் மீது அப்படி என்ன பாசம் என்று அவரின் ஆதரவாளர்கள் கோபப்பட்டனர். சொந்த அப்பா பேச்சையே கேட்காத லோஸ்லியாவை போய் இந்த சேரன் நம்புகிறார். இவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் லோஸ்லியா பற்றி சேரனின் மகள் கூறியதில் தவறு எதுவும் இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். எந்த சொந்தப் பொண்ணுக்கும் வரும் கோபம் தான் அவருக்கும் வந்துள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஷெரினை காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்ட தர்ஷன்: நடக்கட்டும், நடக்கட்டும்

ஷெரினை காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட்ட தர்ஷன்: நடக்கட்டும், நடக்கட்டும்

பிக் பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தையும் காண்பிப்பது இல்லை. அவர்கள் மனம் போன்று எடிட் செய்கிறார்கள் என்று முன்னாள் போட்டியாளர்களும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி