ஆப்நகரம்

Bigg Boss 3 Tamil: தல அஜித் பாடலைக் கேட்டு அழுத போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 ஆவது நாளை கடந்துவிட்ட நிலையில், நேற்றைய எபிசோடில், சூப்பர் சிங்கர்ஸ் அணியினர் பாடிய கண்ணான கண்ணே பாடலைக் கேட்டு போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

Samayam Tamil 2 Oct 2019, 6:26 am
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து இறுதி போட்டியை எட்டியுள்ளது. இன்னும் 4 நாட்களில் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதில், யார் டைட்டில் வின் பண்ணுவார் என்ற கேள்வி ஒவ்வொரு பார்வையாளர்கள் மனதிலும் எழுந்து வருகிறது. சாண்டி, முகென், லோஸ்லியா, ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
Samayam Tamil Mugen


இந்த நிலையில், நேற்று பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் புகைப்படங்களாக காண்பித்து, அதில் தங்களது மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டார். இதற்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது அனுபவங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதையடுத்து, நிகழ்ச்சியின் 100 ஆவது நாளை வெற்றிகரமாக கொண்டாடும் வகையில், சூப்பர் சிங்கர்ஸ் சீனியர்ஸின் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிக் பாஸ். ஏற்கனவே சிங்கர்ஸ்க்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுடன் அவர்கள் பாடும் பாடலும், செய்யும் லூட்டியையும் காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு நேற்றைய நிகழ்ச்சி செம ஜாலியாக சென்றது.

இதில், சிங்கர்ஸ் பாடிய விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலைக் கேட்டதும் மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர். மற்றவர்கள் சோகத்துடன் காணப்பட்டனர்.

அடுத்த செய்தி